2025 ஜூன் 25, புதன்கிழமை

பறவைகளை கவணால் அடித்துப் பிடித்தவர்களுக்கு 20,000 ரூபா அபராதம்

Super User   / 2012 ஜனவரி 28 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கொக்கு ஒன்றையும் காட்டுக்குருவி ஒன்றையும் கவணினால் (கெற்றப்போல்) அடித்து பிடித்த சவளைக்கடை பிரதேசத்தை சேர்ந்த இருவரையும் 20 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு கல்முனை நீதவான்  எம்.ஜ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளர்.

சவளக்கடை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் கொக்கு ஒன்றையும் காட்டுக்குருவி ஒன்றையும் கவணினால் அடித்து உயிருடன் பிடித்த 23 மற்றும் 24 வயது இரு இளைஞர்களை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சவளக்கடை பொலிஸார் கைது செய்ததுடன் பிடிக்கப்பட்ட கொக்கும் காட்டுக்குருவியும்
கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை  கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜயர்படுத்திய போது இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு
நீதிபதி உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0

  • Marothoor A.M.R Sunday, 29 January 2012 10:02 PM

    மனிசனை கொலை செய்வோரை கேப்போர் இல்ல .......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .