2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிற்சந்தை -2012

Kogilavani   / 2012 மே 10 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான், ஏ.ஜே.எம்.ஹனீபா)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 'உங்கள் எதிர்காலத்திற்கான திறவுகோல்' எனும் தொனிப்பொருளிலான தொழிற் சந்தை – 2012 நேற்று புதன்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.சி. சல்பியா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார் உள்ளிட்ட பீடாதிபதிகள், திணைக்கள தலைவர்கள், தொழில்சார் நிபுணர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொழில் வாய்ப்புக்களை தேடிக்கொள்வதும், பயிலுனர்களாக இணைந்துகொள்வதும், உள்நாட்டு நிறுவனங்கள் பற்றி அறிந்துகொள்வதுமே இத்தொழிற் சந்தையின் நோக்கமாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .