2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யானைகளால் 300 இற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்

Kogilavani   / 2012 மே 05 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு கரடிப்பால வட்டைப் பிரதேசத்திலுள்ள காணியொன்றுக்குள் நுழைந்த யானைகள் அங்கிருந்த சுமார் 300 இற்;கும் மேற்பட்ட தென்னை மரங்களை நாசம் செய்துள்ளதோடு, அங்கிருந்த களஞ்சியசாலையினையும் சேதப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக காணி உரிமையாளர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவதுளூ

இன்று அதிகாலை குறித்த காணியினுள் நுழைந்த சுமார் 5 யானைகள் அங்கிருந்த உரக் களஞ்சியசாலையினை உடைத்து அதனுள்ளிருந்த உரப் பைகளைச் சேதப்படுத்தியுள்ளதோடு, காணியினுள் இருந்த சுமார் 300 இற்;கும் அதிகமான தென்னை மரங்களை நாசப்படுத்தியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இப் பகுதியில் யானைகளின் நடமாட்டத்தினை தாம் அவதானித்ததாகவும், இது குறித்து வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குத் அறிவித்த போதிலும் அவர்கள் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட தென்னங்காணி உரிமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இப்பகுதியில் யானைகளின் தாக்குதலில் இவ்வாறான பாதிப்புகள் பல தடவை இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த காணி உரிமையாளர் சுட்டிக் காட்டினார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு இன்று காலை அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ முகாம் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வருகை தந்து சேதங்களைப் பார்வையிட்டனர். 



                                                                                                                                                                                                                                                                                                                                                        

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .