Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு, 31 வருடங்கள் கடந்து விட்டன. அது - காத்தான்குடியில் 21.09.1980ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. எனவே, மு.காங்கிரசுக்கு தற்போது 30 வயது என்று கூறப்படுவதும், அது 1981ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதும் பிழையான தகவல்களாகும் என்று ஸ்ரீலங்கா மு.காங்கிரசின் ஸ்தாபகச் செயலாளரும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் வெள்ளி விழா மற்றும் அதன் வயது குறித்து ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் சந்தேகங்களுக்கும் வினாக்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் சட்டத்தரணி கபூர் அண்மையில் அறிக்கையொன்றினை வெளியிட்டார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினைத் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுக்கான அழைப்பிதழில் திகதியும், ஆண்டும் குறிக்கப்பட்டுள்ளன. அந்த அழைப்பிதழின் பிரதிகளை நான் இன்னும் பாதுகாத்து வைத்துள்ளேன். அந்த அழைப்பிதழை தட்டச்சு செய்து – உரியவர்களுக்கு நாங்கள் தான் அனுப்பிவைத்தோம்.
மேலும், கொழும்பு தெமட்டகொட பாஷாவிலாவில் மு.கா.வின் 06 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் 29.11.1986ம் ஆண்டு நடைபெற்றது. அக்கூட்டத்தின் போதுதான் மு.கா. அரசியல் கட்சியாக பிரகடனம் செய்யப்பட்டது.
எனவே கடந்த 29.11.2011 இல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற மு.காங்கிரஸின் வருடாந்தக் கூட்டமானது, அதன் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாவை கொண்டாடுவதற்காக நடாத்தப்பட்டதென்பது சரியான தகவலாகும். அதாவது, முஸ்லிம் காங்கிரஸ் - அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 29.11.2011 அன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தியடைகிறது.
அதேவேளை, 11.02.1988ம் ஆண்டுதான் முஸ்லிம் காங்கிரஸ் - தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டு, அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் தான் இந்தக் கட்சிக்கு மரச் சின்னமும் வழங்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரசை பதிவு செய்யும் பொருட்டு, சட்ட வல்லுனர் பாயிஸ் முஸ்தபாவின் தலைமையில் தலைவர் அஸ்ரப் மற்றும் பாலபட்டபந்தி (ஜனாதிபதி சந்திரிகாவின் செயலாளராக பின்னாளில் பதவி வகித்தவர்) ஆகியோருடன் பொதுச் செயலாளாராகிய நானும் பல தடவைகள் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து இக்கட்சியை பதிவதற்காக வாதித்துள்ளோம்.
இறுதியாக, மு.காங்கிரஸ் அரசியல் கட்சியாகப் பதியப்பட்டமையை உறுதிப்படுத்தி, அப்போதைய தேர்தல் ஆணையாளர் சந்திரா டி சில்வா கையொப்பமிட்டு கடிதமொன்றினை அனுப்பி வைத்தார். அந்தக் கடிதமானது, கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளராகப் பதவி வகித்த என்னுடைய முகவரிக்கே வந்தது. அந்தக் கடிதத்தினை அஷ்ரப் அவர்களிடம் காட்டிய போது ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்!
அதன் பின்னர் 1989ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் மு.காங்கிரஸ் முதன் முதலாக போட்டியிட்டது. அதில் வடகிழக்கிலும், அதற்கு அப்பாலும் சுமார் 30 உறுப்பினர்களை வென்றெடுத்தது.
அத்துடன் இன்னுமொரு முக்கிய விடயம் சம்பந்தமாகவும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அதாவது, பலர் பேசுவது போலவோ, பத்திரிகைகளில் எழுவது போலவோ - முஸ்லிம் காங்கிரஸானது சமூகசேவை சங்கமாகவோ, நல்லிணக்க மன்றமாகவோ அல்லது ஊர் வேலைகளை கவனிக்கும் நலன்புரி அமைப்பாகவோ ஆரம்பிக்கப்படவில்லை.
மாறாக, முஸ்லிம்களுக்கான முகவரியை அரசியல் ரீதியாக அடையாளப்படுத்துவதற்காவே மு.கா. தோற்றுவிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பலதரப்பட்ட அரசியல்வாதிகளும், சிந்தனையாளர்களும், புத்திஜவிகளும் ஆரம்பக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதன்போது, பலவிதமான வாதப் பிரதிவாதங்களுக்கும், காரசாரமான விமர்சனங்களுக்கும் எழுந்தன. அவற்றுக்கு மத்தியில்தான் மு.காங்கிரஸ் அன்று அங்குராப்பனம் செய்து வைக்கப்பட்டது. அப்போது, சிலர் இக்கட்சி தேவையில்லையென்றும் வாதித்தார்கள். வேறு பலர் - 'எமக்கு சலுகைகள் வேண்டாம் உரிமைகள்தான் தேவை' என்றனர்.
இந்த முதலாவது ஆரம்பக் கூட்டமானது 21.09.1980ம் ஆண்டு காத்தான்குடி முன்னாள் பட்டினசபை தலைவர் ஏ. அகமதுலெவ்வையின் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து ஏமாற்றப்பட்டு, விரக்தியும் தோல்வியும் கண்ட நிலையின்தான் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களால் முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் கட்சியின் அவசியம் உணரப்பட்டு - மு.காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டதேயன்றி, வெறும் சமூகசேவை சங்கமாகவோ, ஊர் பொது வேலைகளை பார்ப்பதற்கான அமைப்பாகவோ அல்லது நலன்புரி மன்றமாகவோ மு.காங்கிரஸ் அமைக்கப்படவில்லை.
உலக நாடுகளிலுள்ள அரசியல் கட்சிகளின் பெயர்களில் பொதிந்துள்ள 'காங்கிரஸ்' எனும் நாமத்தினை மையமாகக் கொண்டுதான். மு.கா. வுக்கான பெயர் உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் என்பதற்கான அர்த்தத்தினை சரியாகக் கண்டறிந்த பின்புதான் 'முஸ்லிம் காங்கிரஸ்' எனும் பெயரை இக்கட்சிக்கு நாங்கள் சூட்டினோம். உண்மை இவைதான். இன்றுள்ளவர்களில் அநேகமானோருக்கு இவை குறித்துத் தெரிந்திருக்க நியாமில்லைதான்! இருந்தபோதும், பிழையான தகவல்களை வழங்குவதை அனுமதிக்க முடியாது!
மு.காங்கிரஸ் மூலம் இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மற்றும் தேசியப்பட்டியல் மூலமாக தெரிவாகியுள்ளனர். எனது பெயரும் தேசியப்பட்டியலில் 1989ம் ஆண்டு தொடக்கம் பல தடவைகள் இடம்பெற்றது. ஆனால் சில காரணங்களுக்காக அந்த நியமனம் எனக்குக் கிடைக்கவில்லை. தேசிய நியமனம் கிடைத்தவர்களில் பலர் - இப்போது எம்முடன் இல்லை. வேறு சிலர் முகவரி தெரியாமல் போய் விட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர, இதுவரையும் சுமார் 100ற்கும் மேற்பட்ட மாகாண சபை, மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களை இலங்கை பூராகவும் மு.கா. பெற்றுள்ளது. இதன் மூலம் அரசியலில் மூன்றாவது சக்தியாக மு.காங்கிரஸ் மிகக் குறுகிய காலத்துக்குள் வளர்ச்சி பெற்றது.
இப்படிப் பல வகையான கஸ்ட நஷ்டங்களுக்கு முகங்கொடுத்து - மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுடன் இணைந்து இன்று வரையும் - இப்போதைய தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமுடன் சேர்ந்தும் கடந்த 31 வருடங்களாக கட்சியின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றேன்.
இந்த வகையில், மு.காங்கிரசின் வரலாறு குறித்துப் பேசும் தகுதி எனக்குண்டு என நம்புகிறேன். அதேவேளை, கட்சியின் பழைய சரித்திரங்கள், எமது எதிர்கால சந்ததிகளுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும் எனவும் விரும்புகிறேன்.
காங்கிரஸ் கடந்து வந்த கஸ்டமான காலகட்டங்களின் வரலாற்று பின்னணிகளை இன்றுவரை இன்றுள்ள எம்மவர்களில் எத்தனைபேர் ஆழ – அகலத்துடன் அறிந்து வைத்துள்ளார்கள் என்பது கேள்விக் குறிதான்!
zarjoon Saturday, 17 December 2011 10:26 PM
உங்களுக்கு தேசிய பட்டியல் என்றால் ?
கடந்த தேர்தலில் நிச்சயிக்கப்பட்ட tesiyapaddiyal போஸ்டர் அடித்தவர்களின் நிலைதான் என்ன?
Reply : 0 0
Mohideen - Kattankudi Thursday, 12 January 2012 05:44 PM
மொஹிடீன் காத்தான்குடி - நல்ல விடயத்தை நல்ல நேரத்தில் நன்றாக விளக்கியுள்ளர் சட்டத்தரணி கபூர் அவர்களுக்கு நன்றிகள் பழைய நினைவுகளை மிகவும் நன்றாகவே மீட்டியுள்ளார் அவரை கட்சி கட்டாயம் கவனிக்க வேண்டும் என்பது எங்கள் அவாவும் ஆசையும் ஆகும். அவரின் எண்ணங்கள் ஒருநாள் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Reply : 0 0
Mr. Nilar - Kandy Thursday, 12 January 2012 05:36 PM
எ. நிளார் கண்டி மு.கா முதலில் அறிமுகப்படுத்தியவர்களுள் முதன்மையானவர் பழைய செயலரர் கபூர் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள்தான் கண்டியில் காங்கிரசை கட்டி எழுப்பியவர் மாமனார் குத்தூஸ் உதவியவர் தேர்தலில் பாடுபட்டவர் கபூர் லோயர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
Reply : 0 0
Saaheem Thursday, 29 December 2011 01:45 PM
என்னுடைய கருத்துப்படி தற்போது நல்ல தொண்டர்களுக்கு காலம் இல்லை. அது இறந்த காலம். மூளையால் யோசித்து பதவிககளை மட்டும் விருபுவர்களுக்கு மட்டும் தான் இக்காலம் பயன் புரியும். அஸ்ரப் மாதிரி ஓர் தலைவர் இனி முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்க மாட்டார். எனில் மிஸ்டர் கபூர் உங்கள் மாதிரி கட்சிக்காக பாடுபட்டு உழைத்தவர்களின் கதை கேள்வி குறிதான். நன்றி
Reply : 0 0
Fajrutheen Friday, 23 December 2011 04:25 AM
First of all, SLMC is not an organized party these days, and there is no a seniority policy at all. And it very keen in eliminating the seniors in the party. For an examble, we can take local government election in kalmunai and addalaichenai.so, how can we expect SLMC would treat Mr Gafforr with National List.
Reply : 0 0
hathee Thursday, 22 December 2011 11:11 PM
enna gafoor islathukku ethira ewalavo nadakkuthu intha naattila. athaippathi pesa mun varalla. etha poyum poyum ella paper ilayum podureenga.
Reply : 0 0
நண்பன் Monday, 19 December 2011 02:33 PM
கட்சியின் ஆணிவேராக இருந்தவர்தான் சட்டத்தரணி கபூர் அவர்கள். அவரிடம் மக்களுடன் சிறந்த முறையில் பழகும் பேசும் சிந்திக்கும் உதவும் சிறந்த சிறந்த ஆற்றலும் தேவையான பணமும் படைத்தவர். மற்றவர்களைப் போன்று ஒட்டுண்ணியாக இருக்காமல் தள்ளி நிற்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஏன்னா அவர் ஒரு சட்டத்தரணி வெறும் பட்டத்தரணி இல்லையே.. அவருக்கு கொடுக்கனும் தேசியப்பட்டியல்..
Reply : 0 0
janoovar Monday, 19 December 2011 04:42 AM
கட்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பது தற்போது இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பலருக்கு தெரியாது. ஏன் என்றால் அவர்கள் புதிதாக இணைந்தவர்கள்.
Reply : 0 0
Dr.M.Inamullah PhD Sunday, 18 December 2011 03:56 PM
அவரே 31 வயது என்று சொல்றார்... வெள்ளி விழா இந்த வருடம் கொண்டாடினதும் சரி என்கிறார்...! கட்சி ஆவனங்கள அவரு வைத்திருக்கிறாராம், அவற்றை கட்சி தலைமைக் காரியாலயத்தில் ஒப்படைக்க சொல்லுங்க அலவி ஹாஜியார்...! நான் 30 வயது என்று சொன்னது பிழையாம்...! அவருட கருத்துப் படி ஆரம்பித்த ஆண்டே ஒரு வயது பூர்த்தியாகி கட்சி பிறந்திருக்கிறது போல! 80 ல ஆரம்பிச்ச்சா 81 ல தானேங்க ஒரு வயது. ஆனா இப்ப காங்கிரஸ் உயர் பீடத்துல இருந்து கொண்டே வெள்ளி விழா கொண்டாடிய தலைவர்களுக்கு கட்சி பற்றி என்ன தெரியும் என்று கேட்டிருக்கிறாறு...! 1980 ல கட்சி தான் தொடங்கின , சமூக சேவை அமைப்பு இல்லண்டும் தெளிவாவே சொல்லி வெள்ளி விழா கொண்டாடின மனுஷாளுக்கு ஒரு போடு போட்டிருக்கிறாரு. இடையில போகாம இருந்திருந்தா அவருக்கு அஷ்ரப் சார் தேசிய பட்டியல் கொடுத்திருப்பாரு. வராலாறு தெரியாதவங்க கொடுக்க மாட்டங்க. - இனாமுல்லாஹ்.
Reply : 0 0
Amjath ULM Sunday, 18 December 2011 06:30 AM
தலைவர் Rauff Hakeem அவர்களை நேற்று வந்தவர் என்று சொல்பவர்களுக்கு போட்டோவை பார்த்தவுடன் விளங்கியிருக்கும் அதைபற்றி எல்லாம் கமெண்ட்ஸ் அடிக்க எமக்கு தகுதியில்லை என்று, தலைவர் அஷ்ரபே Rauff Hakeem அவர்களை பக்கத்தில் வைத்து தலைமைத்துவத்திட்கு பழக்கிஎடுத்த தலைவர் என்பது,,,
நாய் வாலை நிமித்தவும் முடியாது...
முழித்துக்கொண்டு தூங்குகிறவனை எழுப்பவும் முடியாது....
நன்றி...
Reply : 0 0
pasha Friday, 16 December 2011 07:52 PM
சகோதரர் கபூருக்கு நிச்சயமாக தேசியபட்டியல் வழங்க பட்டிருக்க வேண்டும்.
Reply : 0 0
zaro Saturday, 17 December 2011 07:41 PM
எதிரணியினர் சொல்லுவதைபோல் தேசிய பட்டியல் ஒன்று அட்டாளைச்சேனைக்கு வந்தால் அது கபூருக்கே கிடைக்க வேண்டும். அவரே முஸ்லிம் காங்கிரஸ் போராளி மற்றவங்கள் ?????????????(தெரிந்ததுதானே நான் சொல்ல வேண்டுமா ) உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதில் கட்சியின் மூத்த போராளிகள் உடன்படுகின்றார்கள். கடந்த பிரச்சார மேடைகளிலும் சொன்னார்கள். இன்ஷா அல்லாஹ் தேசியபட்டியல் கிடைக்க பிராத்திக்கின்றேன்.
Reply : 0 0
munayuraan Saturday, 17 December 2011 03:34 PM
எமது ஊர் தொடர்ந்தும் தேசிய பட்டியலுக்கு ஏமாத்தப்படுமா?? கட்சியில் அதன் தகுதி உங்களுக்குத்தான் உள்ளது என்பது யாவரும் அறிந்த உண்மை இருந்தும் அது கிடைக்குமா?
Reply : 0 0
alakan Saturday, 17 December 2011 06:41 AM
தற்போதைய செயலாளர் ஹசன் அலி சேர் செய்ததை விட நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? தேசியபட்டியல் அட்டளைச்சேனைக்கு கிடைத்தால் எனக்கு கிடைக்கணும் எண்டு எடுக்கும் படம் எட்டாக்கனி
ஹி ஹி..............
Reply : 0 0
london ziyath Saturday, 17 December 2011 12:20 AM
சகோதரர் கபூர் தனக்கு தேசியப்பட்டியல் கிடைக்க வில்ல என்ற கவலையை தெளிவாக கூறியுள்ளார். paavam.
Reply : 0 0
kulathooran Friday, 16 December 2011 11:38 PM
ஸ்தாபக செயலாளரே, மர்ஹூம் தலைவர்கால காங்கிரசையும் இன்றைய காங்கிரசையும் ஒப்பு நோக்கினால், கறையான் புற்று செய்ய கருநாகம் குடிகொண்டுள்ளது என்று சொன்னால் பொருந்துமா?
Reply : 0 0
pasha Friday, 16 December 2011 09:36 PM
national list was given to late Buhardeen Haji and asitha perara. no one questioned it?
Reply : 0 0
சிறாஜ் Friday, 16 December 2011 08:47 PM
மிகவும் திறமான முறையில் கட்சியினைப்பற்றி கூறியிருக்கும் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி கபூர் அவர்களுக்கு நன்றி நிச்சயமாக கட்சி தேசியப்பட்டியல் என்று ஒன்று அட்டாளைச்சேனைக்கு கொடுக்கவேண்டும் என்றால் கட்டாயம் சட்டத்தரணி கபூர் அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் முக்கிய தேவையாக இருக்கிறது. நன்றி மறப்பது நன்றன்று. அவர் மறைந்த தலைவருடன் சேர்ந்து நாட்டிய மரத்தில் அவருக்கு கொடுக்காமல் சாப்பிடுவது நியாயமா..? சிந்தியுங்கள் செயற்படுங்கள்.
Reply : 0 0
meenavan Friday, 16 December 2011 08:30 PM
கட்சி பதியப்பட்ட தேர்தல் ஆணையாளர் கடிதம் உங்கள் பெயருக்கு வந்தாலும், 23 வருடங்கள் கழிந்து விட்டன. இந்நிலையில் தேசிய பட்டியலிலேனும் தங்களை எம்.பி.ஆக நியமிக்கமையின் ஆதங்கமும் புரிகிறது, அணில்களும்,வௌவால்களும், பழங்களை ருசிக்கின்றன, முகவரி அற்றோர் பணத்தின் மூலம் அரசியல் உச்ச பீடத்தில் உள்ளனர். வராலாறு தெரிந்த நீங்கள் அதை நூலுருவில் வெளியிடுங்கள் அது சமூகத்திற்கு காத்திரமாக அமையும். முன்னாள் வங்கி சட்ட அதிகாரி நிறையவே செய்யாலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
34 minute ago
2 hours ago