2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

உறக்கத்திலிருந்தவர்களை யானை தாக்கியது; 4 வயது சிறுவன் பலி, தந்தை படுகாயம்

Suganthini Ratnam   / 2012 மே 24 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}



                          (எஸ்.மாறன், வசந்த சந்திரபால)

அம்பாறை பன்னலகம பிரதேசத்தில் காட்டுயானை குடிமனைக்குள் உட்புகுந்து இன்று அதிகாலை தாக்கியதில் நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததுடன் அச்சிறுவனின் தந்தையார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமண
பொலிஸார் தெரிவித்தனர்.

தமண பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பன்னலகம பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமைஅதிகாலை 3 மணிக்கு வீட்டுக்குள் புகுந்த காட்டுயானை, வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில்  இருந்தவர்களை தாக்கியது.

இதனால் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் தந்தையார் படுகாயமடைந்துள்ளார். அவ்வீடு பாரிய சேதமடைந்துள்ளது. வீட்டிலிருந்த  ஏனையவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் .

இத்தாக்குதலில் காயமடைந்தவர் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை தமண பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .