Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 01 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏஜே.எம்.ஹனீபா)
அரசாங்கத்தின் 'விதுலமு லங்கா' தேசிய வேலைத்திட்டத்தின் 4 மில்லியன் ரூபா செலவில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேசசபையின் உறுப்பினர் ஏ.பிள்ளையான் தம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம், நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் ஸ்தாபக தவிசாளர் திரு சின்னத்துரை, வேல்ட்விஷன் திட்ட இணைப்பாளர் அன்டனி றஜீஸ், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் கே.பொன்னம்பலம், பிரதேச சபை உறுப்பினர் ஏ.அப்துல் சமட் உட்பட கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மின்சாரசபை உத்தயோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
2 hours ago