2025 ஜூன் 09, திங்கட்கிழமை

காஞ்சிரங்குடாவில் வாகன விபத்து 4 பேர் பலி, 23 பேர் காயம்

Super User   / 2011 ஏப்ரல் 13 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மாறன்)

அம்பாறை, காஞ்சிரங்குடாவில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 4 பேர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கன்ரர் ரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

 அம்பாறையிலிருந்து சிலர் மேற்படி கன்ரர் வாகனத்தில் உல்லே பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வரும் வழியிலேயே காஞ்சிரங்குடா சாகம வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதி திடீரென வாகனத்தின் பிறேக்கை அழுத்தியபோது அவ்வாகனம் சரிந்துவிழுந்தது. இவ்வாகனத்தில் பயணம் செய்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .