2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அதிபர்கள் ஆசிரியர்கள் 400 பேர் பாராட்டி கௌரவிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல்.மப்றூக்)

மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வைபவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

மருதமுனை ஹியுமன் லின்க் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு அவ்வமைப்பின் தலைவர் கே.எம்.ரொஷான் தலைமை தாங்கினார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. தௌபீக் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பிதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேற்படி வைபவத்தில் மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் என 400 பேர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.




        
   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .