2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனை வலய பாடசாலைகளுக்கு 47 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

Super User   / 2011 ஒக்டோபர் 30 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கல்முனை கல்வி வலயத்தின் கல்வி மற்றும் பௌதீக வள அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்றுமுன்தனம் வெள்ளிக்கிழமை கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இம் மீளாய்வுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன அதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்முனை வலயப் பாடசாலைகளில் நிலவும் வளப்பற்றாக் குறைகளை நிறைவு செய்யும் வகையில், கமநெகும திட்டத்திலிருந்து 37 லட்சம் ரூபாவினையும், தனது வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாவையும் மொத்தமாக 47 லட்சம் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன இதன்போது தெரிவித்தார்.

இந் நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர் உதயக்குமார், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • ar.nilaakp Monday, 31 October 2011 02:47 AM

    தம்பி ஹரிஸ் அவர்களையும் இதைப்போல அபிவிருத்தி என்ற சொல்லுடன் போட்டோவை பார்க்க ஆசைப்படுகிறேன் இந்த ஜென்மத்தில்.

    Reply : 0       0

    kulathooran Monday, 31 October 2011 03:27 PM

    ar nila(akp) ஒரு திருத்தம். அமைச்சர் அதாவுடன் தம்பி ஹரிசையும் சேர்த்து அபிவிருத்தி போட்டோவை பார்க்க நப்பாசை நடக்குமா?

    Reply : 0       0

    uooran Monday, 31 October 2011 04:29 PM

    கல்முன டவுன ரிசாட்டும் மீதி வேலைகள பியசேன போன்றோரும் மாகாண சபைல உதுமாலெப்பே போன்றோரும் அபிவிருத்தி செய்கிறார்கள் என்றால் வீராவேசம் பேச மட்டும் தம்பிக் கிளி ஒன்று நமக்கு தேவையா?
    கல்முனைண்ட நில இருந்தும் இல்லாத மாதிரி. குடும்பத்தோட போஸ் குடுத்தா போதுமா? அடிக்கடி நீலச்சேட்டு போடற அவரு அவங்கிட்ட சொல்லி பழைய பாலம் போல போடாம புதிசா ஏதாவது செய்யலாமே? சுனாமி அடிச்சி ஏழு வருசமாச்சி இன்னும் மக்கள் தகட்டு குடில்கள்ல தான் இருக்கிறார்கள். இவர்ர கண்ணுல இதெல்லாம் பட மாட்டாதா?

    Reply : 0       0

    uooran Monday, 31 October 2011 08:07 PM

    களத்துரான் சார்
    அதாவுடன் ஏற்கனேவே தம்பி இருந்தவர் தான். அவர் குடும்பத்துடன் நம்ம அதி மேதகு ஜனாதிபதியுடன் போட்டோவில் இணைந்து உள்ளார். இதைவிட உச்ச இடம் உண்டா? அபிவிருத்தி செய்ய என்றால் நம்மட மன்சூர் சார் மஜீத் சார் அஷ்ரப் சார் போல மச்சம் உள்ளவர்களா இருக்கணும்.
    சொல்லிபோட்டம் நீங்க அபிவிருத்தி எல்லாம் எங்ககிட்ட எதிற்பக்கக்கூடாது. பிறைக்கொடி எத்துற வேலை மட்டும்தான் எங்கட வேல.
    எங்க எங்க கொடி ஏத்தணும் எண்டு சொல்லுங்க, முயற்சி பண்ணுறம். சரியா?.......

    Reply : 0       0

    mbm Monday, 31 October 2011 09:38 PM

    போட்டோவ மட்டும் வச்சிக்கிட்டு என்ன பண்ணுறது... கல்லா நிறைய பணம் வேணும்... அத மக்களுக்கு வழங்க இவங்களுக்கு நல்ல மனம் வேனுமுங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .