2025 ஜூன் 25, புதன்கிழமை

சம்மாந்துறை ஆசிரியர்கள் 48 பேருக்கு இடமாற்றக் கடிதங்கள் அனுப்பிவைப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினூடாக சம்மாந்துறை கல்வி வலயத்தில் கடமையாற்றும் 48 ஆசிரியர்களுக்கு வெளிவலயப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கான இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய பெண் ஆசிரியர்கள் 40 பேரும் ஆண் ஆசிரியர்கள் 08 பேரும் அடங்குகின்றனர். இவர்களில் விஞ்ஞானப்பிரிவிற்கு  10 பேரும் ஆரம்பப்பிரிவுக்கு 28 பேரும் வர்த்தகப்பிரிவுக்கு  04 பேரும்  பட்டதாரியொருவரும்  மௌலவிமார் 02 பேரும் விவசாயப்பிரிவிற்கு  03 பேரும் என பிரிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வெளி வலய இடமாற்றங்கள் அனைத்தும் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் வழங்கப்பட்ட புள்ளித்திட்டத்திற்கமைய அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இவ் இடமாற்றங்கள் அனைத்தும் 2012.01.01ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.   இடமாற்றம் பெறும் ஆசிரியர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் அனைத்தும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இடமாற்றம் தொடர்பாக தங்களது மேன்முறையீடுகளை மேற்கொள்ளமுடியுமெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .