2025 ஜூன் 25, புதன்கிழமை

6ஆம் கொளணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜித் திறப்பு

Super User   / 2012 ஜனவரி 13 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சவளக்கடை 6ஆம் கொளணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் பிலால் ஜூம்ஆ பள்ளிவாசல் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையுடன் திறந்துவைக்கப்பட்டது.

சவூதி அரேபியாவை சேர்ந்த அஷெய்ஹ் ஷஹ்றானியின் ஞாபகார்த்தமாக அவரின் புதல்வர்களினால் பல இலட்சம் ரூபா செலவில் இப்பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 
ஜூம்ஆ பள்ளிவாசலின்  தலைவர் எம்.எச்.அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் சவூதி அரேபியாவை சேர்ந்த அஷெய்ஹ் முஹ்ஷின் ஷஹ்றானி, அஷெய்ஹ் ஷஆத் ஷலிஹ் ஷஹ்றானி, அஷெய்ஹ் முஹம்மட் ஷஹ்றானி, ஜம்யியதுஸ் ஸபாப் நிறுவணத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அஷெய்ஹ் எம்.எஸ்.எம்.றஷிட், ஜம்யியதுஸ் ஸபாப் நிறுவனத்தின் இணைப்பாளர் ஷபர் சாலிஹ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சவூதி அரேபியாவை சேர்ந்த அஷெய்ஹ் முஹ்ஷின் ஷஹ்றானியினால் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதுடன் அஷெய்ஹ் எம்.ஜே.எம்.றிஸ்வானினால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • pasha Friday, 13 January 2012 08:24 PM

    சவூதி கட்டி கொடுத்த சுனாமி வீடு தான் திறக்காமல் பாழடைந்து கிடக்கின்றது.

    Reply : 0       0

    meenavan Saturday, 14 January 2012 06:02 AM

    அமைச்சர் அதா போட்ட முடிச்சினை அவரே அவிழ்த்து சுனாமி வீடுகள் மக்களுக்கு கிடைக்க வழிசெய்ய வேண்டும்,

    Reply : 0       0

    athambawa al. ameen Saturday, 14 January 2012 04:23 PM

    மாஷா அல்லாஹா.......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .