Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 15 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
சட்டவிரோதமாக தென்னங்கள்ளு மற்றும் மதுபானம் விற்பனை செய்த 7 பேருக்கு ஒரு இலட்சத்து ஜயாயிரம் ரூபாவை தண்டமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த வாரம் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், விநாயகபுரம் ஆகிய பிரதேசங்களில் வீடுகளில் சட்விரோதமாக தென்னங்கள்ளு, மதுபானம் விற்பனை செய்த 7 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நேற்று புதன்கிழமை பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் நேற்றையதினம் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானபோதே, தலா ஒவ்வொருவருக்கும் 15,000 ரூபா வீதம் தண்டம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago