2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ.மு.கா. அங்கத்தவர்களென கூறப்படும் 750 பேர் தே.காவில் இணைவு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை, சின்னப்பாலமுனை, ஆலங்குளம் ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய ஆதரவாளர்களென கூறப்படும் 750க்கும் மேற்பட்டோர் தேசிய காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் இணைந்து கொண்டு கட்சியின் அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்டனர்.

தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச கட்சி அங்கத்தவர்கள் ஒன்று கூடல் அட்டாளைச்சேனையில் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றபோதே இவர்கள் இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அக்கட்சியின் தேசிய தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான எம்.எல்.ஏ.அமீர், வேட்பாளர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாவுல்லா சக்கி உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.   

                                                   

You May Also Like

  Comments - 0

  • flowertree Monday, 06 August 2012 03:15 PM

    இப்படித்தான் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கூட்டம் அங்கிருந்து இங்கு போவதும் இங்கிருந்து அங்கு போவதும் ஒரு தொழிலாக செய்கிறார்கள் இவர்கள் SLMC இல் இருந்தார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்

    Reply : 0       0

    Ameer Tuesday, 07 August 2012 12:25 AM

    வங்கரோத்து அரசியல் வியாபாரம் இந்த இது. எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி மக்களை ஏமாற்றும் இவ்வகையான வித்தைகளுக்கு மக்கள் என்ன ஏமாந்தவர்களா. அவர்களுக்கு ஏதாவது கொடுத்திருக்க வேண்டும் தோன்றுகிறது. அடுத்து நிற்கும் கூட்டத்தை பார்த்தால் 100 பேர் மட்டில் காணப்படுகின்றார்கள். ஆனால் கடந்த செய்தியில் 500, 750 இதில் ஏதாதோ வில்லங்கம் உள்ளது.

    Reply : 0       0

    muzarrath Friday, 10 August 2012 08:57 AM

    கவனம் உங்களையும் விட்டுவிட்டு சென்று விடாது பார்த்துக்கொள்ளுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .