2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 9 வறிய மாணவர்களுக்கு நிதியுதவி

Super User   / 2012 மே 18 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒன்பது வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கென சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகை நிதி குறித்த மாணவர்களிடம் நேற்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

இவர்களுக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வு நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, குறித்த காசோலைகளை சிறுவர்களிடம் வழங்கிவைத்தார்.

மேற்படி நிதியினை இம்மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக - சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் திருகோணமலை அலுவலகம் - ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினூடாக வழங்கியது. 

அந்தவகையில், ஐந்து மாணவர்களுக்கு 7,500 ரூபா வீதமும், இரண்டு மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாவும், ஏனைய இரு மாணவர்களுக்கு 2,500 ரூபா வீதமும் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலகக் கணக்காளர் எஸ். கனகரெத்தினம், சமுர்த்தித் தலைமைப் பீட முகாமையாளர் கே. நேசராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .