2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்காக 94.09 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 10 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கென இவ்வாண்டு  94.09 மில்லியன் ரூபா பொருளாதர அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இவ்வொதுக்கீட்டின் மூலம் இம்மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளும் 503 கிராம அலுவலகர்  பிரிவுகளும்  அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அவர் கூறினார்.

கிராமத்திற்கொரு வேலைத்திட்டத்திற்கென 50.30 மில்லியன் ரூபாவும் சமூக அபிவிருத்தி, புரநெகும, வாழ்வாதார மேம்பாடு அபிவிருத்திக்கென 43.79 மில்லியன் ரூபாவும் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை தேர்தல் தொகுதிக்கு 75 மில்லியனும் கல்முனை தேர்தல் தொகுதிக்கு 75.7 மில்லியனும் பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதிக்கு 151.7 மில்லியனும் சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கு 35.5 மில்லியனும் தொகுதி அடிப்படையில்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 10 March 2012 08:24 PM

    எம்.பி ஹரிசின் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 75.7 மில்லியன் ரூபாவில் அஸ்ரப் வைத்திய சாலைக்கு எவ்வளவு ஒதுக்குவாரோ? ஏற்கனவே நூறு லட்சம் சுகாதார அமைச்சினால் உபகரணங்கள் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்டு ஒரு தொகுதி உபகரணங்கள் வைத்தியசாலையை அடைந்துள்ளன.

    Reply : 0       0

    riswan Saturday, 10 March 2012 11:22 PM

    இதில் எத்தனை மில்லியன் அபிவிருத்திக்கு பயன்படும்? எத்தனை மில்லியன் பணத்தை சுருட்ட போகிறார்கள்?

    Reply : 0       0

    kulathooran Saturday, 10 March 2012 11:32 PM

    எம்.பி.ஹரிசின், மேயர் பதவிக்காலத்தில் நிருமாணிக்கப்பட்ட கல்முனை தென் எல்லை "கேட் வே" இன்னும் நிறம் தீட்டபடாதுள்ளது அதற்கு தமது நிதியிலிருந்து ஒதிக்கீடு செய்து கல்முனை மாநகர் அன்புடன் வரவேற்கிறது என்பதன் மூலம் தான் தொடங்கிய பணியை முடித்து வைப்பாரா?

    Reply : 0       0

    வில்லன் Sunday, 11 March 2012 01:54 AM

    riswan எழுத்து ஓடும் முன்பே சண்டை காட்சியை விரும்புகிறீர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .