2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்'

Niroshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

இளைஞர்களது இந்த முன்மாதிரியை நமது மக்கள் ஏற்றுக்கொள்வதன் ஊடாக எதிர்காலத்தில் தமிழ் தேசியத்துக்கு உரமான சிந்தனை விதைகளை விதைக்க முடியும் என்ற அவாவுடன் வெற்றி பெற்ற இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா ) தெரிவித்தார்.
 
நடைபெற்று முடிந்த இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

இம்முறை நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்கள் எமது மாவட்ட தமிழ் மக்களுக்கு தெளிவான செய்தியினை வழங்கியுள்ளார்கள்.

எமது இளைஞர்களின் ஒற்றுமை இன உணர்வு இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.எமது இளைஞர்களின் இத்தகைய சிந்தனை எமது மாவட்ட மக்களிடம் இருந்திருக்குமாயின் கிழக்கு மாகாண சபையில் ,மத்திய அரசில் பல ஆச்சரியங்களை நாம் நிகழ்த்தியிருக்க முடியும்.

காலம் கடந்த ஞானம் பயன்படாதுதான் என்றாலும் எதிர்காலத்துக்கு இந்த ஞானம் அவசியம் பயன்படவேண்டும்.

எமது இளைஞர்களது இந்த முன்மாதிரியை நமது மக்கள் ஏற்றுக்கொள்வதின் ஊடாக எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்துக்கு உரமான சிந்தனை விதைகளை விதைக்க முடியும் என்ற அவாவுடன் வெற்றி பெற்ற இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களான கல்குடா தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் குழந்தை ஜெபக்குமார் ,மட்டக்களப்பு தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வட் பயஸ்ராஜ் ,பட்டிருப்பு தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பிறைசூடி வதிஸ்குமார் ஆகியோருக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை வழங்குவதில் உவகையுடன் மகிழ்வும் பெரிமிதமும் அடைகின்றேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .