2025 ஜூலை 16, புதன்கிழமை

30 உணவு விடுதிகளில் சோதனை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

பொத்துவில், அறுகம்பைப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை 30 உணவு விடுதிகளின் சமயலறைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், மனித பாவனைக்கு உதவாத சுமார்  50,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டதாக கல்முனை பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் என்.தேவநேசன் தெரிவித்தார்.

பழுதடைந்த உணவுப் பொருட்கள் வைத்திருந்த விற்பனையாளர்களுக்கும் டெங்கு நுளம்புகள் பரவும் சுற்றாடலை வைத்திருந்தவர்களுக்கும்  சுகாதார ஆலோசனை வழங்கப்பட்டதுடன், பாதுகாப்பற்ற சூழலை வைத்திருந்தவர்கள் கால அவகாசத்துடன் எச்சரிக்கப்பட்டதாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அலாவுதீன் தெரிவித்தார்;.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .