2025 ஜூன் 28, சனிக்கிழமை

'சிறுவர்களின் உரிமையை பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பாகும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சிறுவர்களின் உரிமையைப் பாதுகாப்பது ஒரு சமூகத்தின் பாரிய பொறுப்பாகும் என அட்டாளைச்சேனை ஜலால்டீன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி இன்று வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்ற சிறுவர் தின வைபவத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையை பொறுத்த வரை இன்று சிறுவர்களின் பாதுகாப்பு, அவர்களின் உரிமையும் கேள்விக் குறியாக எம்மத்தியில் காணப்படுகின்றது.

சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் உரிமை தொடர்பாகவும் நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் குறிப்பாக பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது.

சிறுவர்களை வளர்ப்பதிலும் அபிவிருத்தியடையச் செய்வதற்குமான ஆரம்பப் பொறுப்பு பெற்றோரிடம் அல்லது சட்டமுறையான பாதுகாவலரிடம் உள்ளது.

சுகாதாரக் கவனிப்பு வசதிகளை அடைந்து கொள்வதற்கான அவனின் அல்லது அவளின் உரிமை, சமூகக் காப்புறுதி அடங்களான சமூகப் பாதுகாப்பின் நலனைப் பெறும் உரிமை உண்டு.

பொருத்தமான வழிமுறை மற்றும் வழிகாட்டல் வழங்குவதற்குள்ள பெற்றோரின் அல்லது சட்ட பாதுகாவலர்களின் பொறுப்புக்கள், உரிமைகள் மற்றும் கடமைகள் என்பவற்றினைக் குறிக்கும்.

சிறுவர் உரிமைகள் சம்பந்தமாக சட்டங்கள், கொள்கைகள், பாதுகாப்பு பொறிமுறைகள் என்பன இருக்கின்ற போதும், சிறுவர்கள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றமையும் தொழில்களுக்கு அமர்த்தியிருப்பதைம் காணக்கூடியதாகவுள்ளது.

அண்மைக்காலமாக எமது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துன்புறுத்தல்களும் படுகொலைகளும் அனைவரையும் கவலைக்குள்ளளாகியுள்ளது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசும் பொதுமக்களும் சட்டரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகளே சிறுவர் உரிமைகளின் அடிப்படை என்பதால் அனைத்து சிறுவர்களும் சமத்துவமானவர்கள் என்பதை நாம் மனதிற் கொள்வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .