2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படும்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 04 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தின் காட்டை அண்டிய பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளைக் கொண்ட குழுவினரால் இரவு வேளைகளில் திடீர்ச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சட்டவிரோத துப்பாக்கிகள்; பறிமுதல் செய்யப்படுமெனவும்   வனஜீவராசிகள் திணைக்களத்தின் அப்பிரதேச அதிகாரி ஏ.ஏ.ஹலீம், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

அத்துடன், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் திருக்கோவில் பிரதேசத்தில் காட்டு யானைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் பட்டாசு, பொறிவெடிகளுக்கு இலக்காகி இறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர்களின் அறிக்கைகளில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இதைத் தடுத்து காட்டு யானைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இருப்பதினால், மேற்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X