2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

95 சதவீதமானவர்களுக்கு நோய்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

உலகத்திலுள்ள சனத்தொகையில் சுமார் 95 சதவீதமானவர்கள் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், இவர்களில் 90 சதவீதமானவர்கள் நோய்களுக்கு மருந்துகளை பயன்படுத்துவதாகவும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'உலக சுகாதார நிறுவனத்தின் 2015ஆம் ஆண்டு தகவலின் அடிப்படையில் உலகில்; தயாரிக்கப்படும் மருந்து வகைகளை நிறுத்திவிட்டு அதன் பாவனையை 24 மணித்தியாலங்களுக்கு கட்டுப்படுத்தினால், உலகிலுள்ள சனத்தொகையில் சுமார் 73 சதவீதமானவர்கள் இதன் மூலம் இறப்பைச் சந்திப்பர்' என்றார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X