2025 மே 22, வியாழக்கிழமை

93 மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 03 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அனுமதிப்பத்திரமின்றி சிறிய கன்டர் ரக வாகனத்தில் 93 மரக்குற்றிகளை அம்பாறை, மருதமுனைப் பிரதேசத்திலுள்ள மர ஆலையிலிருந்து நாவிதன்வெளிப் பிரதேசத்துக்குக் கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் அவ்வாகனச் சாரதியை புதன்கிழமை (02) மாலை கைதுசெய்ததுடன், வாகனத்துடன் மரக்குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சவளக்கடை வீதியில் குறித்த வாகனத்தை மறித்துச் சோதனையிட்டபோது, அனுமதிப்பத்திரமின்றி தேக்கு உள்ளிட்ட மரக்குற்றிகளைக்; கொண்டுசென்றமை தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .