Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 04 கிராமசேவகர் பிரிவில், அரச காணியில் வசித்து வரும் 11 குடுபங்களுக்கு, காணி அமைச்சர் சந்திரசேனவினால் நேற்று (30) காணி அனுமதிப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கைத் திட்டத்தின் கீழ், கிராமத்துக்கு கிராமம் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இந்நிகழ்வு நடைபெற்றது.
சுபீட்சத்தின் நோக்கு மற்றும் காணி அமைச்சின் சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தணி நிலாந்த விஜயசிங்க தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் காணி அமைச்சர், வன விலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் விமல வீர திசாநாயக்க, அம்பாறை மாவாட்ட அபிவிருத்தி குழு தலைவர் டி.வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
27 minute ago
1 hours ago