Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 31 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையும் ஜாமியுல் குர்ஆனி ஹக்கீம் நிறுவனமும் இணைந்து நடத்திய அல்-குர்ஆன் கற்பித்தல் தொடர்பான இருநாள் செயலமர்வில் பங்குபற்றிய 120 மௌலவி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தத்ரீஸ் குர்ஆனை புதிய முறையில் வடிவமைத்து தமிழ், அரபு மொழிகளில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வீடுகளில் இலகுவாக முறையில் போதிக்கக் கூடியதாக வடிவமைத்த அஷ்ஷேகு ஓ.எம்.பாஸி ஆலிம்பை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்றன.
சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஐ.ஏ.ஜப்பார் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில் பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேசசபை தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட், விசேட அதிதிகளாக கல்முனை கல்வி அதிகாரி அஷ்-ஷேக் மௌலவி இசட்.எம்.நதீர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் றமீஸ் அப்துல்லாஹ், முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் மௌலவி எஸ்.எல்.சுபைத்தீன் ஆகியோருடன் உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்களும்; கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தில் அஷ்ஷேகு ஓ.எம்.பாஸி ஆலிமுக்கு 'ஷைய்குத்தத்ரிஸ்' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மௌலவி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ABDUL RAZEEK MOHAMED FOUZAN Monday, 01 August 2011 05:32 AM
ALHAMTHULILAH
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago