Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஒழுங்கு செய்திருந்த டெங்கு ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கண்காட்சி கடந்த சனிக்கிழமை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.
இன்று இலங்கை மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாகவுள்ள ஆட்கொல்லி நோயான டெங்கு காய்ச்சலை உண்டுபண்ணும் டெங்கு நுளம்பை பெருக விடாமல் தடுக்கக்கூடிய வழிமுறைகள் பற்றி பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஊட்டக்கூடிய வகையில் கண்காட்சி அமைந்திருந்தது.
இதன்போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் கருத்து தெரிவிக்கையில், "கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலேயே தான் குறைவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருதில் இதுவரை 19 டெங்கு நோயாளர்கள் மட்டுமே இனங்காணப்பட்டதுடன் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. அயல் கிராமமான காரைதீவில் 157 பேரும் கல்முனையில் 132 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எமது தொண்டர்களினதும் பொது சுகாதார பரிசோதகர்களினதும் தொடர்ச்சியான பணியினால் சாய்ந்தமருது பிரதேசம் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது பொது மக்கள் சிறந்த விழிப்புணர்வை பெற்றுள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது" என்று கூறினார்.
பொது மக்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் பாடல்கள் அடங்கிய இறுவட்டும் சுகவனம் எனும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் www.mohsainthamaruthu.blogspot.com என்ற இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் வைத்திய அதிகாரிகளும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
4 hours ago