2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனை மாநகர சபையின் சிரமதான நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

ஐரோப்பிய யூனியன் மற்றும் யுனொப்ஸ் ஆகியவற்றின் அனுசரணையில் கல்முனை மாநகர சபையும் சாய்ந்தமருது பிரதேச செயலகமும் இணைந்து சாய்ந்தமருது, தாமரைக்குள சுற்றுவட்டத்தில் சிரமதான பணியொன்றில் இன்று சனிக்கிழமை காலை ஈடுபட்டனர்.

கல்முனை மாநகர மேயர் இஸட்.எம்.மசூர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி மேயர் ஏ.ஏ.பஸீர் , சாய்ந்தமருது பதில் பிரதேச செயலாளர் எம்எஸ்.லியாகத் அலி, சமுர்த்தி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ.அலியார் உட்பட யுனொப்ஸ் பிரநிதிகளும் கலந்து கொண்டு சிரமதானத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

சிரமதான பணியில் சமூர்த்தி பயநுகரிகள் ,கல்முனை மாநகர ஊழியர்கள் , விளையாட்டுக் கழகங்கள் மற்றும் சமூகசேவை அமைப்புகளின் அஙகத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .