2025 ஜூன் 21, சனிக்கிழமை

மீளக்குடியமர்த்துமாறு கோரிக்கை

Super User   / 2010 நவம்பர் 30 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய பிரதேசங்களிலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து தற்போது திருக்கோவில் பிரதேசத்தில் வசித்து வரும் மக்கள், தங்களை மீண்டும் தமது பிரதேசங்களில் மீளக்குடியமர்த்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கஞ்சிகுடியாறிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 600 குடும்பங்களும், தங்கவேலாயுதபுரத்திலிருந்து வெளியேறிய சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்தோரும் தற்போது திருக்கோவில் பிரதேசத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கான திட்டக்கிராமங்களை இப்பகுதியில் சர்வேதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்துள்ள போதிலும், தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதையே இந்த மக்கள் விரும்புகின்றனர்.

1990ஆம் ஆண்டு மேற்படி பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த இந்த மக்கள் பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேறினர். மீண்டும் 2006ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலை காரணமாக தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேறிய நிலையிலேயே தற்போது திருக்கோவில் பிரதேசத்தில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .