2025 ஜூன் 21, சனிக்கிழமை

திருக்கோவில் கடலில் இளைஞனின் சடலம் மீட்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.சரவணன்)

திருக்கோவில் கடலில் நேற்று காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலத்தை  பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

பதுளையைச் சேர்ந்த விஜயக்குமார் செல்வக்குமார் (வயது 20) என்ற இளைஞனின் சடலத்தையே இன்று காலை 09 மணியளவில்  திருக்கோவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குளிக்கச்சென்ற இடத்திலிருந்து ஒரு மைலுக்கு அப்பால் மேற்படி இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விளைஞனின் சடலம் திருக்கோவில் பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை திருக்கோவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போனதுடன் அவர்களிள் ஒருவரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மற்றைய இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுப்பட்டுவருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .