2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட முஸ்லிம் பகுதிகளை பிரித்தெடுக்கவே அக்கரைப்பற்று மாநகர சபையாக தரமு

Super User   / 2011 மார்ச் 11 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட முஸ்லிம் பகுதிகளை பிரித்தெடுத்து உருவாக்கப்படவுள்ள  தீகவாபி பிரதேச சபைக்கு அமைச்சர் அதாஉல்லா வழங்கிய ஆதரவுக்கு பகரமாக வழங்கப்பட்டதே அக்கரைப்பற்று பிரதேசத்திற்கான மாநகர சபை அந்தஸ்தாகும் என முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளரும்இ முன்னாள் அமைச்சரும்இ முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு தவிசாளருமான எம். எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சேகு இஸ்ஸதீன்,

அக்கரைப்பற்றை மாநகர சபையாக்கியதற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். அக்கரைப்பற்றை விடவும் சம்மாந்துறை இரண்டு மடங்கு பெரியதொரு பிரதேசமாகும். அந்தப் பிரதேசத்தை நகர சபையாக கூட இன்னும் ஆக்கவில்லை.

அம்பாறை பெரிய நகரம். அங்கு அநேகமாக எல்லா திணைக்களங்களும் இருக்கின்றன. அங்கு தயாரத்ன என்கிற அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர் இருக்கிறார்.

இந்த மாவட்டத்தில் அதிகமான வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர இருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் சிரானி இருக்கின்றார்.

இவர்களெல்லாம் அம்பாறைக்கு மாநகரசபை அந்தஸ்த்;து வழங்க வேண்டுமெனக் கோரி நிற்கும் போது, அவர்களுக்குக் கொடுக்காமல் அதாவுல்லாவுக்கு அக்கரைப்பற்று மாநகரசபை கொடுக்கப்படுகின்றதென்றால் அதற்குப் பின்னாலுள்ள விடயம் தான் என்ன?

அட்டாளைச்சேனையின் அரைவாசி நிலப்பகுதியானது, உருவாக்கப்படவுள்ள தீகவாபி பிரதேசசபையுடன் செல்லப் போகிறதா? பாலமுனைப் பிரதேசத்தின் ஒரு பகுதி தீகவாபி பிரதேச சபையுடன் இணையப் போகிறது. இது ஜாதிக ஹெல உறுமயவின் திட்டத்தில் இருக்கிறது.

இவைகளுக்கெல்லாம் ஏற்கனவே அமைச்சர் அதாவுல்லா கையெழுத்திட்டுக் கொடுத்து விட்டதனால் தான், அவருக்கு அக்கரைப்பற்று மாநகர சபை எனும் எலும்புத் துண்டு வீசப்பட்டிருக்கிறது

அதை எடுத்துக் கொண்டு இங்கு வந்து அமைச்சர் கெட்டித்தனம் பேசுவது எத்தனை கேவலமானதொரு விஷயம்?

இந்தத் தேர்தல்கள் முடிந்த பின்னர், தீகவாபிப் பிரதேச சபை உருவாகும் போது, அக்ரைப்பற்று - இறக்காமம் என தொடர்புபட்டிருக்கும் இரண்டு முஸ்லிம் பிரதேசங்களின் எல்லைகளும் உடையும்.

நடுவே தீகவாபி பிரதேச சபை செல்லும். அமைச்சர் அதாவுல்லா இதைத்தான் செய்யப்போகின்றார். இதற்காகப் போடப்பட்ட எலும்புத் துண்டுதான் அக்கரைப்பற்றுக்கான மாநகர சபை அந்தஷ்தாகும் என்றார்.

இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை, மு.கா.வின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான முதன்மை வேட்பாளர் ஏ.எல்.எம். நசீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0

  • mohammed Saturday, 12 March 2011 03:00 PM

    தேவை இல்லாத வேலை மலையடி மஸ்தானுக்கு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .