2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கால்நடை வளர்ப்புக்காக ஆடுகள் விநியோகம்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் ஸகாத் குழுவினரால் வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்புக்காக ஆடுகள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

மேர்சி லங்கா நிறுவனமும் எம்.எப்.சி.டி. நிறுவனமும் இணைந்து அட்டாளைச்சேனை ஸகாத் குழுவினூடாக மேற்கொண்ட இந்த வேலைத்திட்டத்தில் 20 குடும்பங்களுக்கு கால்நடை வளர்ப்புக்காக ஆடுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உலமாசபைத் தலைவரும் அட்டாளைச்சேனை ஸகாத் குழுவின் தலைவருமான மௌலவி ஏ.எல்.எம்.காசிம், அட்டாளைச்;சேனை ஸகாத் குழுவின் செயலாளர் எம்.எச்.எம்.உவைஸ் உட்பட எம்.எப்.சி.டி. நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.முஸாதிக் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .