Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
சுனாமியினால் பாதிக்கப்பட்ட கல்முனை பிரதேச மக்களில் ஒரு தொகையினருக்காக நிர்மாணிக்கப்பட்ட இறைவெளிக்கண்ட வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகளில் ஏற்கெனவே பகிர்ந்தளிக்கப்பட்டவை தவிர ஏனைய வீடுகள், கவனிப்பாரற்ற நிலையில்; சேதமடைந்து காணப்படுவதுடன், அவ்வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அங்கிருந்து காணாமல் போயுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இறைவெளிக்கண்டத்தில் பகிர்ந்தளிக்கப்படாமல் எஞ்சியுள்ள குறித்த 29 வீடுகளையும் சுனாமியினால் பாதிக்கப்பட்டு இதுவரை வீடுகளின்றி அல்லலுறும் தமக்கு வழங்குமாறு கல்முனையிலுள்ள சிலர் மீளவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
கல்முனைப் பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த 2005ஆம் ஆண்டு அரசாங்கத்தின் திறைசேரியிலிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து இறைவெளிக்கண்ட வீட்டுத் திட்டத்தில் 456 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
தொடர்மாடிகளாக நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுக்திட்டத்தில் 12 வீடுகளைக் கொண்ட 38 வீட்டுத்தொகுதிகள் அமைக்கப்பட்டன.
மேற்படி வீட்டுத் திட்டத்திலுள்ள 427 வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்டன. மிகுதியாக உள்ள 29 வீடுகளையும் வழங்கும் முயற்சியில் சில மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவற்றினைப் பகிர்ந்தளிக்கும் முயற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
மேற்படி 29 வீடுகளையும் பெறுவதற்காக சிபாரிசு செய்யப்பட்டோர் பட்டியலில் - சுனாமியால் பாதிக்கப்படாதோர், பாதிக்கப்பட்டு ஏற்கனவே வீடுகளைப் பெற்றுக் கொண்டோர் உள்ளிட்ட தகைமையற்ற பலர் உள்ளடக்கப்பட்டிருந்ததாக பொதுமக்களால் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்தே அந்த 29 வீடுகளையும் பகிர்ந்தளிக்கும் முயற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், மேற்குறித்த 29 வீடுகளில் அதிகமானவற்றின் கதவு மற்றும் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளினுள் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் களவுபோயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
08 Jun 2025