2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனை மாநகர மண்டபம் பூட்டப்பட்டிருப்பது குறித்து மக்கள் விசனம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 17 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர மண்டபம் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படாமல் ஒருவருட காலமாக பூட்டப்பட்டிருப்பது குறித்து கல்முனை மாநகரசபை எல்லைக்குள் வாழும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை, குல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய பிரதேச மக்களின் பொது நிகழ்வுகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த மாநகர மண்டபமானது சுமார் 800 இருக்கை வசதிகளை கொண்டதாகும்.

2008, 2009ஆம் ஆண்டுகளில் தற்காலிகமாக கல்முனை சுகாதாரப் பிரதிப் பணிப்பாளர் அலுவலகமாக இந்தக் கட்டிடம் பாவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில்  சுகாதார பிரதிப்பணிப்பாளர் அலுவலகமானது கல்முனை நகரில் அமைக்கப்பட்ட நிரந்தர சுகாதார பணிமனைக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

இதேவேளை, சுமார் ஒருவருடத்தை தாண்டியும் இந்த மண்டபம் மக்கள் பயண்பாட்டிற்கு விடப்படாததையிட்டு இப்பிரதேச வாசிகள் கவலை தெரிவிப்பதுடன் கல்முனை மாநகர சபையானது உடனடியாக இதனை மக்கள் பயண்பாட்டிற்கு விடவேண்டும் எனக் கோருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர பிரதிமேயர் ஏ.ஏ.வஸீரிடம் கேட்டபோது, 'கல்முனை சுகாதார பிரதிப்பாணிப்பாளர் அலுவலகம் இயங்கிய காலத்தில் மின் கட்டணத்தில் ஒருபகுதி செலுத்தப்படாது விடுபட்டதனால் அங்கு மின்சார இணைப்;பு துண்டிக்கப்பட்டுள்ளது' என்றார்.

'எனினும் எதிர்வரும் மாநகரசபை அமர்வில் இந்த விடயத்தை கொண்டுவந்து இம்மண்டபத்தை திறப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள உள்ளோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • Nafar Monday, 18 April 2011 03:44 PM

    அப்படி என்னதான் வேலை செய்கிறார்கள் இந்த வேலை எல்லாம் பார்க்காமல்.

    Reply : 0       0

    acmhathil kalmunai Wednesday, 20 April 2011 03:46 PM

    மாநகர சபை பிளஸ் கிவ் பிரைவேட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .