2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சாய்ந்தமருதில் கவர்ச்சி நடனங்கள்; அமைச்சர் டலஸ் கடுப்பு

Super User   / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாய்ந்தமருதில் நடைபெற்ற இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின்  நிகழ்ச்சியொன்றின்போது கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமை குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உத்தயோகஸ்தர்களை கடுமையாக திட்டியுள்ளார்.

அண்மையில், கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிழக்கு மாவட்ட நிலையம் என்பன இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

இந் நிகழ்ச்சிக்காக வருகை தந்தவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் இடைக்கிடையில் கவர்ச்சியான உடையணிந்த யுவதிகளின் நடனங்களும் நடத்தப்பட்டன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசத்தில் இவ்வாறான கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமை குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சு அதிகாரிகளை கடுமையாக திட்டியதாக அமைச்சரின் ஊடக செயலாளர் சட்டத்தரணி எவ்.எம். ஹென்ரிக்ஸ் இன்று தெரிவித்தார்.

"சாய்ந்தமருது பிரதேசம் பூரணமாக ஒரு முஸ்லிம் கிராமம். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பாலானோர் முஸ்லிம்கள்; என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அங்கு முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு முரணான வகையில் நிகழ்ச்சி நடத்தியமை குறித்து தன் செயலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை திட்டினார். அத்துடன் இனிமேல் அமைச்சின் கீழ் நடைபெறும் எவ்வித வைபவங்களின் போது நாட்டின் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுமாறும்  உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த உத்தரவு குறித்து  அப்பிரதேசத்தின் முஸ்லிம் தலைவர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர் எனவும்" அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • sahi Thursday, 21 April 2011 08:47 AM

    இவ்வாறான கவர்ச்சி நடனங்கள் முஸ்லிம் சமுகத்தில் இருந்து தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    Reply : 0       0

    A.Riyal Saturday, 30 April 2011 07:20 PM

    சாய்ந்தமருது உலமா சபை இதற்க்கான சரியான நடவடிக்கை சம்மந்தப்பட்டவர்கள் மீது எடுக்க வேண்டும்

    Reply : 0       0

    kalamkalmunai Tuesday, 26 April 2011 03:07 AM

    முஸ்லிம் கட்சிக்காரர்கள் என்ன செய்தார்கள் .இப்ப மட்டும் எங்கே போனது அவர்களின் தன்மானம் ? மேடையில்தானே எம் பி யும் இருந்தார்.

    Reply : 0       0

    JAZ Sunday, 24 April 2011 09:20 PM

    IVVARANE ADETHEIKALEI NAAM NICHEYEMAAHE KANDIKKE VEANDUM,
    MUSLIM THALEIVERKALE ITHU NIYAAYEMA

    PALLIVASALUM KOODE PAKKETHULE IRHUTHUM IPPEDIYA....

    ITHU KALMUAI MANUKKEA AVEMANEM

    Reply : 0       0

    Yaseer Arafath Saturday, 23 April 2011 05:17 PM

    எமது முஸ்லிம் மக்கள் ஏற்பாடு செய்த விழாவில் இவ்வாறான முற்றிலும் இஸ்லாத்துக்கு விரோதமான செயல் இடம்பெற்றிருப்பது மிகவும் கண்ண்டிக்கதக்கது, இது போன்ற செயல்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க சாய்ந்தமருது உலமாசபை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Reply : 0       0

    xlntgson Friday, 22 April 2011 07:59 PM

    பெருமூச்சு விடுகின்றேன்!
    நிர்வாண நடனம் நடத்தாமல் விட்டார்களே என்று!
    ஹிக்கடுவ் நினைவு இருக்கிறதா, ஒருபாற் சேர்க்கைகாரர்கள் தினம்?

    Reply : 0       0

    sareef moulana Friday, 22 April 2011 04:39 PM

    ஏன் அப்படி சொல்கின்றீர்கள்? aanalum neenkal katpathi niyayam irukurathu.

    Reply : 0       0

    sajeewa Friday, 22 April 2011 04:00 PM

    அமைச்சர் டலஸ் பிழை விட்டுள்ளார்.அவர் சாய்ந்தமருது விழா குழுவினர்களுக்குத்தான் திட்டியிருக்க வேண்டும். அவர்கள் தான் அந்த மாதிரியான நடன குமாரிகளை அம்பாறையில் இருந்து அழைத்து வந்தவர்கள். இவர்கள் முஸ்லிம்களா?......

    Reply : 0       0

    m c a fareed Friday, 22 April 2011 03:05 AM

    மிஸ்டர் ஷரீப் மௌலான நீங்கள் சொல்வது சரிதான் சாய்ந்த மருதில் உலமா சபையா அப்படி ஒன்று இருக்கின்றதா?

    Reply : 0       0

    mohamed jaleel Thursday, 21 April 2011 08:00 PM

    இது எல்லாம் ஒரு நடிப்பு.

    Reply : 0       0

    Hassan makkah-raxapana,malwana Thursday, 21 April 2011 06:20 PM

    மிஸ்டர் பைசல், நீங்கள் சொல்வது சரிதான். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுபவர்கள் இல்லை. தேவையாயின் பாலும் கொடுப்பார்கள்.

    Reply : 0       0

    Hassan makkah-raxapana,malwana Thursday, 21 April 2011 05:50 PM

    கண்மூடித்தனமாக நடந்து கொள்ளும் முஸ்லிம் பெருமக்களே ஒரு சிலரே எச்சரிக்கை விடுக்கிறேன் குரான் ஹதீஸ் சுன்னாவேயும் பின்பற்றி இஸ்லாத்தில் பூரனமாக நுழைந்து கொள்ளுங்கள் வல்ல அல்லா எங்கள் எல்லோருக்கும் சுவர்கத்தை தருவானாக. ஆமீன்!

    Reply : 0       0

    Thariq Niyas Thursday, 21 April 2011 05:03 PM

    மாற்று மத அமைச்சர் ஒருவர் சுட்டிக் காட்டும் அளவுக்கு நமது ஊர் பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் கோபப் பார்வையில் இருந்து எப்படி நாம் மீள முடியும்... இறைவா அனைவருக்கும் நல்ல அறிவைக் கொடுப்பாயாக

    Reply : 0       0

    ajanthan ajan Wednesday, 20 April 2011 11:55 PM

    சில அரபு நாடுகளுக்கு சென்று இருந்தால் தெரியும் உங்களுக்கு, அங்கு இருக்கும் கவர்ச்சி மற்றும் பலானதுகள் பற்றி.
    பாருங்கள் இவருக்கு வந்த கோபத்தை. அக்கறையாம் .

    Reply : 0       0

    faisal Thursday, 21 April 2011 08:35 AM

    பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுகின்றவர்கள்தான் அரசியல்வாதிகள்.

    Reply : 0       0

    Sareef moulana Thursday, 21 April 2011 05:59 AM

    இது தொடர்பாக சாய்ந்தமருது உலமா சபை எங்கள் கிராம முஸ்லிம் மக்கள் மீது அக்கறை செலுத்தவேண்டும்.

    Reply : 0       0

    mohamed sihan Thursday, 21 April 2011 05:54 AM

    கவர்ச்சியாக ஆட விட்ட அந்த பெற்றோர்களின் கண் எங்கே போய்விட்டது? நடத்தியவர்களுத்தான் கண் இல்லை. இவர்களுக்கு எங்கே போய் விட்டது ?

    Reply : 0       0

    Dr.Sameeh Thursday, 21 April 2011 05:47 AM

    இது தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் டலஸ் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிதுக்கொள்கின்றேன். இன்னும் எங்களுக்கு தெரியாமல் என்னனென்ன நடகின்றதோ....

    Reply : 0       0

    fathima farsana Thursday, 21 April 2011 05:19 AM

    கட்டாயம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Reply : 0       0

    mohamed sihan Thursday, 21 April 2011 05:16 AM

    இளைஞர் சேவைகள் நடதுகின்றார்களாம் .....சேவை ....... பொதுவாக எல்லா மத ரீதியாகவும் இது தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

    Reply : 0       0

    mohamed sihan Thursday, 21 April 2011 05:09 AM

    ஒவ்வருவரும் தாங்கள் வீட்டில் பெண்களும் இருகின்றார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.

    Reply : 0       0

    Thilak Thursday, 21 April 2011 05:08 AM

    இன, மத நல்லுறவு, சிறுபான்மையினரின் கலாசாரங்களை மதித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிப்பவர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும. அது பலருக்கும் தெரியும்.

    Reply : 0       0

    mohamed sihan Thursday, 21 April 2011 05:06 AM

    மற்றைய நாடு தவறு செய்கின்றது என்பதுக்காக எங்களுடைய நாட்டில் இருகின்றவர்கள் தவறு செய்வதா? இல்லை தடுப்பதா? ஏனைய மதத்தவர்களுக்கு இது தவறு இல்லாமல் இருக்கலாம். அனால் முஸ்லிம்களுக்கு இது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

    Reply : 0       0

    mohamed sihan Thursday, 21 April 2011 05:01 AM

    நிச்சயமாக இறைவனின் கோபத்தை, இவ்வாறான கவர்ச்சி நடனங்கள் நடத்தும், அதை தடுக்க சக்தி இல்லாமல் கை தட்டும் முஸ்லிம் மார்க்க தலைவர்களும் வெகு விரைவில் அதனுடைய பாராட்டை இறைவனிடம் இருந்து பெறுவார்கள்.

    Reply : 0       0

    m c a fareed Thursday, 21 April 2011 03:14 AM

    ஏற்பாட்டாளர்களுக்கு கண் எங்கே போய்விட்டது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .