2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் கடமையாற்றும் மாகாண சபைக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றத்தை இடைநிறுத்தக்கோரி இன்று அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஜும்ஆ தொழுகையின் பின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் சமூக ஒன்றியம் என்ற அமைப்பினால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2007ஆம் ஆண்டிற்கு பின்னர் நியமனம் செய்யப்பட்ட சுமார் 600இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த இடமாற்றத்தினூடாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட வேண்டும் என்பதே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.


You May Also Like

  Comments - 0

  • kalam,kalmunai. Friday, 22 April 2011 08:56 PM

    பி.இ.டி.க்கு என்ன நடந்தது? இவர் செல்லும் இடமெல்லாம் இடமாற்றம் செய்து கின்னஸ் சாதனை படைக்கப் போகிராறோ?

    Reply : 0       0

    Ameen Saturday, 23 April 2011 10:34 PM

    இந்த இடமாற்றங்கள் ஏன் ? மேலதிகம் என்றால் எப்படி வந்தது ? கல்முனை கல்வி வலயம் மட்டும் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றா? இன்றைய மா.க.பணிப்பாளர் தானே முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் ? இடமாற்றம் கல்முனைக்கு புதிதான ஒன்றா ? இடமாற்றத்தை எதிர்பவர்கள் இவ்வளவு காலமும் நித்திரையில் இருந்தார்களா ? முன்னர் இல்லாத அக்கறை இவர்களுக்கு இப்போது மட்டும் எப்படி வந்தது ?

    Reply : 0       0

    Ameen Saturday, 23 April 2011 10:50 PM

    கண்டனங்கள் செய்வதனால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. இடமாற்றங்கள் நிச்சயமாக நடக்க வேண்டும். பாடசாலைகள் ஆசிரியருக்கு சொந்த வீடு அல்லவே . கல்வி எல்லோருக்கும் பொதுவானது. நேர சூசி இல்லாமல் சம்பளம் பெறுவது தேசத் துரோகமல்லவா ? மா. க. பணிப்பாளரே உங்கள் நட்பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள் .

    Reply : 0       0

    ameer Thursday, 28 April 2011 10:29 PM

    உங்களால் அம்பாறை சிங்கள ஆசிரியர்களை இடமாற்றம் செய்யமுடியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .