2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விளையாட்டுக் கழகத்திற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் நிதியுதவி

Super User   / 2011 ஏப்ரல் 23 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்கத்தின் அபிவிருத்திக்காக தனது சொந்த நிதியிலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் ஒரு தொகைப் பணத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

இந் நிகழ்வு இன்று அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிதியினை தவிசாளரிடமிருந்து சோபர் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் ஏ.எஸ்.எம். உவைஸ் பெற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் கழகத்தின் நிருவாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, சோபர் விளையாட்டுக் கழகம் கடந்த 06 வருடங்களாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் சம்பியன் பட்டத்தைப் வென்று வருவதைக் கொண்டாடும் முகமாக, அக் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சீருடையொன்றை தவிசாளருக்கு கழக உப தலைவர் உவைஸ் வழங்கி வைத்தார்.

அட்டாளைச்சேனை புளூ இலவன் விளையாட்டுக் கழகத்தினருக்கும் தனது சொந்த நிதியிலிருந்து அண்மையில் தவிசாளர் நசீர் ஒரு தொகையினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .