2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஒன்றுகூடல்

Super User   / 2011 ஏப்ரல் 24 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை பொத்துவில் அறுகம்பே பென்சி ஹோட்டலில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ. அப்துல் மஜீட், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.வாஸீத், உப தலைவர் எம்.ஏ.தாஹூதீன் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகவியலாளர்களின் எதிர்கால திட்டங்கள், பொத்துவில் பிரதேசத்திலுள்ள காணி, எல்லை பிரச்சினை, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .