2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்தின் திண்மக் கழிவு முகாமைத்துவ செயலமர்வு

Kogilavani   / 2011 மே 30 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வொன்று இன்று திங்கட்கிழமை அம்பாறை மொனிற்றி விடுதியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தோறும் மேற்படி திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக குப்பைகளை சேகரித்து அதனை சேதனப் பசளையாக மாற்றுகின்ற படிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் செயற்படுத்தி வருகின்றது. முதற்கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அம்பாறை, காரைதீவு, அட்டாளைச்சேனை பிரதேசங்களை தேர்ந்தெடுத்து இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இதில் முழுமையான வெற்றி காணப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் குறிப்பிட்டார்.

முதற்கட்ட செயற்திட்டம் நாளை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். இச்செயற்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் ஏனைய இரு மாவட்டங்களிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் குறித்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இன்று விளக்கமளிக்கப்பட்டது.

இச்செயலமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், மாகாணசபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மேற்படி திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஒரு நியதிச் சட்டம் உருவாக்கப்பட்டு அது கிழக்கு மாகாண சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கபடவுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலும் இத்திட்டம் விஸ்தரிக்கபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தேவராஜன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .