Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 27 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பிரதேசத்தில் அமையவுள்ள விளையாட்டு மைதானம் தொடர்பாக பொதுஅமைப்புகளுடன் கலந்துரையாடலொன்று நேற்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
தற்காலிகமாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வரும் காணியில் எதிர்வரும் மாதங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட புனர்நிர்மாண வீடமைப்பு வேலைகள் இடம்பெறவுள்ளதாலும் மைதானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் குப்பைகூழங்கள் கொட்டப்பட்டுள்ளதாலும் அதனை செப்பனிட்டு விளையாடுவதற்கு தயார் செய்யவேண்டுமெனவும் இதற்கான பூர்வாங்க வேலைகளை செய்வதற்காக பணம் தேவைப்படுவதாலும் அதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்ற பிரதேச செயலாளரின் பிரேணைக்கு வருகை தந்த அமைப்புக்கள் தங்களது அமைப்பிலிருந்து குறிப்பிடத்தக்க பணத்தினை மைதான நிர்மாணத்திற்கு தருவாதாகவும் எஞ்சிய பணத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தனவந்தர்களிடமிருந்து நிதியினை பெற்று மைதானத்தை அமைப்பதற்கு உதவி பெறவேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட், ஓய்வுபெற்ற கல்முனை முஸ்லிம் கோட்டைக் கல்வி அதிகாரி ஏ.பீர்முஹம்மட் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தர்களும் ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
kulathooran Wednesday, 27 July 2011 04:49 PM
வீரர்களுக்கு விளையாட்டு மைதானம், சுனாமி அகதிகளுக்கு வீடு இரண்டும் அவசியம். ஆனால் அரசியல் சடுகுடு காரணமாக இரண்டுமே நடக்காமல் போகலாம் . பொதுசனங்களே அவதானமாக இருக்கவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago