Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 27 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர்.அஹமட்)
முஸ்லிம்களின் நேர்மையான அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என என ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸின் பொது செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி தெரிவித்தார்.
நிந்தவூர் அல் - மதீனா மகா வித்தியாலாத்தில் நடைபெற்ற மாணவ தலைவர்கள் தின விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,
அரசாங்கம் முஸ்லிம்களை புறக்கணித்தால் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை புறக்கணிப்பதற்கு பின் நிற்க போவதில்லை. அரசியல் அதிகாரத்திற்காக போராடிய முஸ்லிம் காங்கிரஸ், அந்த அதிகாரம் பற்றிய கருத்து கூர்டையடைந்துள்ள இன்றைய நிலையில் மௌனித்து போய் இருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.
மேலும், முஸ்லிம்களை புறக்கணிக்கும் நிலைப்பாட்டினையே பேரினவாதிகள் தொடந்தும் பின் பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். எனினும் எமக்கும் அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். அரசாங்கம் முஸ்லிம்களோடும் பேச வேண்டும்.
ஆகக் குறைந்தது அம்பாறையில் கரையோர மாவட்டமாவது தரப்பட வேண்டும். பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதுவும் தரமாட்டோம் என்று பிடிவாதமாக இருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். இம்மாவட்டங்களில் அரசியல் மையம் அரசியல் நிர்வாகங்கள் அனைத்தும் பெரும்பான்மையினரால் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு முஸ்லிமை அரசாங்க அதிபராக நியமிக்க முடியாதுள்ளது. அதேநேரம் தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மாவட்டங்களில் தமிழர்கள் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களுக்கு மாத்திரம்தான் புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்படுகின்றது.
இது எங்கள் நாடு இங்கிருந்து எம்மை எவரும் துரத்த முடியாது. இந்த நாட்டில் தேசப்பற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது கலாசாரத்தை எந்தக் கொம்பன் வந்தாலும் விட்விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.
kulathooran Wednesday, 27 July 2011 09:29 PM
சொல்வதற்கு வாய் கூசவில்லையா ? மு.கா M.P. க்களான அனைவரும் அரசுடன் இரண்டரக் கலந்துவிட்டு இப்போது கதை அளக்கிறீர்கள். வார்த்தை ஜாலம் மட்டும் உங்களைவிட்டு போகாது.
Reply : 0 0
bzukmar Wednesday, 27 July 2011 10:20 PM
சார், கூரை ஏறி கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்று சொன்னானாம். இது தான் நினைவுக்கு வருகிறது.
Reply : 0 0
mca fareed Thursday, 28 July 2011 02:46 AM
அடெங்கப்பா தோங்கிட்டாப்பா ,
Reply : 0 0
naazar Friday, 29 July 2011 04:43 AM
உங்களுக்கு நல்ல பகடி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago