2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தான் சார்ந்த விடயங்கள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ள முன் என்னுடன் கலந்தலோசியுங்கள்: ஹரீஸ் எம்.பி.

Super User   / 2011 ஜூலை 27 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தான் சார்ந்த விடயங்கள் தொடர்பாக நபர்களோ, அமைப்புக்களோ ஏதாவது தீர்மானங்கள் அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் அவை தொடர்பில் தன்னுடன் கலந்தாலோசிக்குமாறும், தன்னைச் சம்பந்தப்படுத்தும் விடயங்களில் அடுத்தவரின் மனங்களை நோவினை செய்யும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோளொன்றினை விடுத்துள்ளார்.

ஹரீஸ் எம்.பி.க்கு பிரதியமைச்சர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு 'முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு' எனும் சங்கமொன்று - மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்றினை விடுத்திருந்ததாக நேற்று செவ்வாய்கிழமையன்று ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இச் செய்தி குறித்து கருத்துத் தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்ளூ

எனக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ள விடயத்தை 'முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு' எனும் சஙகம் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. இது சரியில்லை. இதனால், என்னைப் பற்றிய பிழையான அபிப்பிராயங்கள் வலிந்து உருவாக்கப்படக் கூடும்.

எமது கட்சிக்குள் பிரதியமைச்சர் போன்ற பதவிகளை யாருக்கு வழங்கலாம் என்கின்ற தீர்மானங்களை கட்சித் தலைமை தான் தீர்மானிக்கும். அது மட்டுமன்றி, அடுத்தவருக்கோ அல்லது மற்ற மாவட்டமொன்றுக்கோ வழங்கப்பட்டுள்ள பதவியைச் சுட்டிக் காட்டி, அது தொடர்பாக விமர்சிப்பதனூடாக நமக்கான வெகுமதியினை நாம் பெறுவதற்கு முயற்சிக்கத் தேவையில்லை!

மு.கா.வின் தலைவர் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் உள்ளிட்டோரிடம் நான் எப்போதும் அன்பும், மதிப்பும் கொண்டுள்ளேன். ஆகவே, எனக்கு நன்மை செய்வதாக நினைத்து யாரும் தன்னிச்சையாகவோ, எழுந்தமானமாகவோ 'முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு' என்கிற சங்கம் விடுத்துள்ள கோரிக்கைக்கு ஒப்பானவற்றினை மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஒரு விடயத்தைச் செய்யும் போது – சம்பந்தப்பட்டோருக்கு அதில் பாதகங்கள் ஏற்படாதவாறும், மற்றவர்களின் மனங்களை நோவினை செய்யாதவாறும் பார்த்துக் கொள்தல் அவசியமாகும். அதுவே புத்திசாலித்தனமான நடவடிக்கையாகவும் அமையும் என்றார்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 28 July 2011 04:28 AM

    தம்பி உங்களை எம்.பி.யாக்கினார்கள், மேயர் யாக்கினார்கள், மீண்டும் எம்.பி.யாக்கினார்கள்.வாக்காளர்கள் உங்களை பிரதியமைச்சர் ஆக்க விரும்புகிறார்கள். அதை சும்மா விட்டுடுங்க . தூக்கிபிடியாதயுங்கோ நடப்பது ஒன்றும் இல்லைதானே?

    Reply : 0       0

    ummpa Thursday, 28 July 2011 02:21 PM

    மீனவன் சரியாக சொன்னிர்கள் . என்ன நடந்துள்ளது இதுவரை இந்த MP பதவியுடன் . சும்மா நாடகம் நடத்தாம இருங்கோ !

    Reply : 0       0

    Pasha Thursday, 28 July 2011 05:20 PM

    பிள்ளையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் நாடகம்.

    Reply : 0       0

    hussain Thursday, 28 July 2011 06:27 PM

    நீங்க இருக்கிற வீதியை கூட உங்களால போட முடியல, உங்கள அரசியலுக்கு வாங்க என்று யாரு கட்டாயப்படுத்தின?
    கதிரையை சூடாக்க எங்களுக்கு ஆள் தேவை இல்லை...

    Reply : 0       0

    hussain Thursday, 28 July 2011 06:28 PM

    arasiyal nadikan

    Reply : 0       0

    nasrin Thursday, 28 July 2011 07:51 PM

    போங்க ஒங்களுக்கு எல்லாத்திலையும் பகடிதான்.

    Reply : 0       0

    sifan Thursday, 28 July 2011 10:33 PM

    சும்மா பின்றிங்க . முடியல .. ஹையோ ... ஹையோ ...

    Reply : 0       0

    Abdul ahad Friday, 29 July 2011 05:17 AM

    இப்படியாக எல்லோரும் கதைத்தால் கல்முனையை யார் அபிவிருத்தி பண்ணுவது?

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 29 July 2011 06:14 AM

    எங்களின் கொமண்டையும் போடுங்க சேர்.

    Reply : 0       0

    M.A Friday, 29 July 2011 10:27 AM

    மு.கா. தலைவருடைய அமைச்சு பதவியைக்கொண்டு முதலில் கல்முனையை அபிவிருத்தி செய்யுங்கள். பின்னர் அறிக்கை ஒன்றும் விடத்தேவயில்லை. அடுத்த தேர்தலில் நீங்கள் அமைச்சராகலாம்.

    Reply : 0       0

    jabbar Friday, 29 July 2011 03:16 PM

    பிரதர் ஹரீஸ், உங்கட சமூகப் பற்றும், தியாகமும் இந்தப் பசங்களுக்கெல்லாம் விளங்குமோ. கல்முனையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் செயல் வீரனல்லோ நீங்கள். உங்களால் கல்முனை சிறப்புப் பெறுகின்றது. இன்னும் இன்னும் பசப்பு வார்த்தைகள் பேசாமல், உங்களுக்கு பிரதி அமைச்சர் பதவி தேவையில்லை. எம்பி பதவியே அதிகமாகிவிட்டது. பரவாயில்லை. இருக்கிற மிச்சம் 4 வருடத்தையும் ஒருமாதிரியா கழித்துவிட்டு கவுரவமாகப் போயிடுங்க. கல்முனை மக்கள் உங்கட நேர்மையைப் பற்றி கேள்வி கேட்கிற அளவுக்கு அவ்வளவு மடையர்கள் இல்லை.

    Reply : 0       0

    kareem Friday, 29 July 2011 03:22 PM

    என்னே மனித நேயம் ஐயோ ஐயோ.

    Reply : 0       0

    தாஹீர் Saturday, 30 July 2011 04:28 PM

    நான் ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கின்றேன். ஏன் ஐயா இந்த பசப்பு வார்த்தை பேசி காலத்தை கழிக்கிறீங்க?

    Reply : 0       0

    Kumthan MA Saturday, 30 July 2011 04:39 PM

    சும்மா உங்கட ஆசனத்தை காபாத்துற வேலைய பாருங்க கடவுள் உங்களுக்கு புண்ணியம் தருவான்.

    Reply : 0       0

    mama Sunday, 31 July 2011 01:38 AM

    உங்கட சேவைகள் இப்ப எங்கயாவது நடக்குதா?

    Reply : 0       0

    Sreese Monday, 08 August 2011 09:52 PM

    Anything will happen by giving the dupety minister in Ampara district. Any how Hon. MP got a good topic on behalf of his people. Great time pass.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7