2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தைக்கா நகர் சஹ்றா வித்தியாலயத்துக்கு தொலைபேசி, கணினிக்கான மின் சேமிப்புக் கருவி கையளிப்பு

Kogilavani   / 2011 ஜூலை 28 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று, கல்முனை மாவட்ட சாரண உதவி ஆணையாளருமான எஸ்.எல். முனாஸ்  தனது சொந்த நிதியிலிருந்து அட்டாளைச்சேனை தைக்கா நகர் சஹ்றா வித்தியாலயத்துக்கு இணைப்புடனான தொலைபேசியொன்றினையும் மற்றும் கணினிக்கான மின் சேமிப்புக் கருவியொன்றையும் பெற்றுக்கொடுத்தார்.

மேற்படி பொருட்களை பாடசாலை நிருவாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை அட்டாளைச்சேனை சஹ்றா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அதிபர் ஏ.எல். அன்வரிடம் பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் குறித்த பொருட்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் வலய கல்விப்  பொறுப்பாளர்கள், பாடசாலையின் பிரதியதிபர் ஜெலீல், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அறக்கொடை நிதியமொன்றினூடாக பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் இவ்வாறான உதவிகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Thursday, 28 July 2011 10:43 PM

    ஜனாப் முனாஸ் அவர்களே தொலைபேசி இணைப்புடன் நிற்காமல், அதற்குரிய மாதாந்த வாடகையை செலுத்துவதற்கும் ஒரு நிதியை ஒதிக்கினால் நன்றாக இருக்கும்.

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 29 July 2011 06:10 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் புதிய அரசியல்வாதி முனாஸ் அவர்களே உங்களின் சேவையினை பாராட்டுகிறோம். தொடருங்கள் நல்ல சேவையினை. சிறியவரானாலும் மக்கள் விரும்பும் ஒருவராக இருப்பது நல்லது. ஆனால் இது என்றும் தொடரணும் . அதனால் உங்கள் ஊரில் உள்ள மாகான அமைச்சருடன் இணைந்து செல்லுங்கள் வாழ்த்துகிறோம்.

    Reply : 0       0

    saroo Saturday, 30 July 2011 11:34 PM

    தங்களுக்கு அரசினால் கிடைக்கும் பணத்திலேயே சேவை செய்ய யோசிக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் இந்தக்காலத்தில் உங்களின் சொந்தப்பணத்தை வைத்து செய்யும் சேவையினை பாராட்டுகிறோம்.

    Reply : 0       0

    நண்பன் Saturday, 30 July 2011 11:42 PM

    அனைவரும் ஒற்றுமைப்படும் நாள் என்று வருமோ அன்றுதான் அட்டாளைச்சேனை உருப்படும். புதிய புதிய முகங்கள் எப்படித்தான் வந்தாலும் இருப்பவர்கள் இடம்தர மறுக்கிறார்களே என்ன செய்வது?
    தலைவர் சொன்னது போன்றது முன்னால் கிடப்பது எதுவானாலும் நல்லது செய்ய தயங்காமல் முன்னுக்கு வாருங்கள்.

    Reply : 0       0

    முனாஸ் பிரதேசசபை உறுப்பினர் Monday, 01 August 2011 07:43 PM

    அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
    இன்ஷாஹ் அல்லாஹ் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு மக்களுக்கும் ஊருக்கும் சேவை செய்யனும் என்ற நோக்கிலேதான் நான் அரசியலுக்குள் நுளைந்தே.ன் நிச்சயமாக எனது பணி இனிதே தொடரும் ஆலோசனையும் ஒத்துழைப்பும் வழங்குங்கள் அனைவருக்கும் நன்றி.

    Reply : 0       0

    rwra Thursday, 04 August 2011 07:30 AM

    உறுப்பினர் முனாஸ் அவர்களே நீங்கள் உதுமாலெப்பை மினிஸ்டருடன் இணைந்து கொண்டால் இன்னும் பல சேவைகளை மக்களுக்காக செய்ய முடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7