2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உயர்தர மாணவர் தின விழா

Suganthini Ratnam   / 2011 ஜூலை 30 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உயர்தர  மாணவர் தின விழா கல்லூரியின்  எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம்  பிரதம அதிதியாகவும்  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கௌரவ அதிதியாகவும்  கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் விசேட அதிதியாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல் மற்றும் கே.எம்.ஏ.றஸாக் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இலங்கை முஸ்லிம் கல்வி வரலாற்றில் முதற்தடவையாக 17 மாணவர்கள் பொறியியல்த்துறைக்கு ஒரே தடவையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 75 மாணவர்கள் இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வரலாற்று சாதனை புரிந்துள்ள மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு சாதனை ஏற்படுத்தி தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட 30  மாணவர்களையும்  பாராட்டி  பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7