Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 31 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் நிர்வாகசபை தேர்தலை எதிவர்ரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கல்முனை மாவட்ட நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் நடத்துமாறு கல்முனை மாவட்ட நீதவான் எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பு தொடர்பாக கடந்த ஜந்து வருடங்களாக கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நீதவான் எம்.இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.
இத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
1862ஆம் ஆணடு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை கிராமத்தின் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை உருவாக்கிய இராமநாதர் ஆறுமுகம் அவரது மனைவி அருணாசலம் பிச்சையம்மா, ஆகியோர் இறந்தபின்னர் ஊர்மக்களால் ஆலயத்திற்கான யாப்பு விதிமுறைகள் எதுவுமின்றி ஆளப்பட்டுவந்துள்ளது.
எனவே இன்று (29.07.2011) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கல்முனை நீதிமன்றத்தினால் நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்;திற்கான ஆலய யாப்பு விதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ் ஆலயத்தை ஸ்தாபித்தவர்களின் வம்ச வழித்தோன்றல்களில் ஒருவரும் இல்லையென்பதால் இவ் ஆலயத்தை சட்டவிரோத ஆயுத் குழுக்களும், பொதுமக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர்களும் கடந்த காலங்களில் நிர்வகித்து வந்துள்ளனர்.
அவர்களை நீதிமன்றம் கண்டித்து சட்டவிரோத நம்பிக்கை பொறுப்பாளர் சபையாக பிரகடனம் செய்துள்ளது. எனவே அவர்கள் வசமுள்ள ஆலயத்தின் சகல சொத்துக்களையும் நீதிமன்ற பதிவாளரினால் அமைக்கப்படும் புதிய நிர்வாகசபையிடம் நிர்வாகம் அமைக்கப்பட்டு இரு
வாரகாலத்திற்குள் ஒப்படைக்கவேண்டும். தீர்ப்பு வழங்கப்பட்ட தினமான ஜீலை 29 ஆம் திகதியிலிருந்து நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்;தின் அனைத்து அசையும் அசையா சொத்துக்களும் பொதுமக்களின் நம்பிக்கை தர்மச் சொத்து என கல்முனை மாவட்ட நீதிமன்றம் பிரகடனம் செய்கின்றது.
மேற்படி நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்திற்கான நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான அறிவித்தல் பகிரங்கப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு ஆலயமுன்றலில் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவுகள் மாவட்ட நீதிமன்ற பதிவாளர் திருமதி ரி.ஆர்.பரநாதன் முன்னிலையில் இடம்பெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago