2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

Super User   / 2011 ஜூலை 31 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 4ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் இன்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எஸ்.பிரேமதிலக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதவியுர்வு பெற்ற சங்க உறுப்பினர்களை கௌரவித்தல், சங்கத்தின் செய்தி மலர் வெளியீடு மற்றும் புதிய நிர்வாகத் தெரிவு என்பன இடம்பெற்றன.

இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் கே.கனகசுந்தரம், கௌரவ அதிதியாக பிரதி அஞ்சல் அத்தியட்சகர் (மட்டக்களப்பு) பி.புவனசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முதலாம் நிலை அஞ்சல் அதிபராக இருந்து நுண்ணாய்வு பரிசோதகராக பதவியுர்வு பெற்ற எம்.இஸட்.எம்.பாறூக், உப அஞ்சல் அதிபராக இருந்து அஞ்சல் அதிபராக பதவியுயர்வு பெற்ற எம்.ஐ.எச்.ஆசிக் ஆகிய சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7