Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் முன்னேற்றத்திற்கான சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கிடையில் பரஸ்பர உறவை வளர்த்து திறன்களை மேம்படுத்துவதற்கான 5 நாள் பயிற்சிப்பட்டறை சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பயிற்சிப்பட்டறையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மகாஓயா பொல்வெத்த சிங்கள வித்தியாலயம், சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயம், பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த மன்னம்பிட்டி தமிழ் மகாவித்தியாலயம், திம்புலாக்கள காசியப்பன் மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 40 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்கின்றனர்.
முதல் நாள் நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட அலுவலக பொறுப்பாளர் ஏ.சலீம், திட்ட உத்தியோகத்தர்களான எம்.எஸ்.எம்.கப்லின், எம்.முகீஸ், பொலன்னறுவை பிரதேச பிரதிக் கல்விப்பணிப்பாளர் பி.நிமால் ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன், வளவாளர்களாக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.முஸ்தபா, பயிற்றுவிப்பு ஆசிரியர் கே.எம்.தமீம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
பொலன்னறுவை, வவுனியா, யாழ்ப்பாணம், அநுராதபுரம், அம்பாறை ஆகிய 5 மாவட்டங்களில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago