2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்குப் பல்கலையில் புவியியல் துறை அறிமுகம்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் ஒரு புதிய துறையாக புவியியல் துறை அண்மையில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இப்புதிய துறை உருவாக்கமானது, கலை கலாசார பீடாதிபதியாக கடமையாற்றிவரும் எஸ்.எம்.ஆலிப்பின் முயற்சியின் காரணமாக இது உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய துறையின் உருவாக்கம் தென்கிழக்கப் பல்கலைக்கழகத்திற்கும், விசேடமாக கலை கலாசாரப் பீடத்தின் வளர்ச்சிக்கும் பிரதான ஒரு மைல் கல்லாகும் என பீடாதிபதி குறிப்பிட்டார்.

விரைவில் மேலும் இரண்டும் புதிய துறைகள் (பொருளியல் மற்றும் புள்ளியவிபரவியல் துறை, அரசியல் விஞ்ஞானத் துறை) உருவாகுவதற்கு முயற்சி எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் இதுவரை காலமும் இரண்டு துறைகளுடன் இயங்கிவந்த கலை கலாசார பீடமானது எதிர்வரும் காலங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட துறைகளுடன் இயங்கிவருவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் பீடாதிபதி எஸ்.எம்.ஆலிப், இதன் மூலம் புதிய கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் உடனடியாக வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.   

 


You May Also Like

  Comments - 0

  • vaasahan Monday, 08 August 2011 10:53 PM

    வேற என்ன மெடிகல் பிகல்டியா எடுக்கப்போறாங்க. அங்க இருக்கிற பெரிய சேர் இனி டீன் ஆக கதவு திறந்தாச்சி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7