2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தாதி உத்தியோகத்தர்கள் கவனஈர்ப்பு எதிர்ப்பு நடவடிக்கை

Super User   / 2011 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

 

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக தாதி உத்தியோகத்தர்கள்  இன்று புதன்கிழமை கவனஈர்ப்பு எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

க.பொ.த உயர் தரத்தில் கலை பிரிவு சார்பில் தகைமைகளைக் கொண்டுள்ளவர்களை - தாதிப் பயிற்சி நெறிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த கவன ஈர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தினை இலங்கை தாதி உத்தியோகத்தர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் தாதிப் பயிற்சி நெறிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் வகையில் அண்மையில் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நேர்முகப் பரீட்சைகளில் தோற்றியிருந்த விண்ணப்பதாரிகள் க.பொ.த உயர்தரத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்றவர்கள் எனக் கூறப்படுகிறது.

க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் தகைமைகளைக் கொண்டவர்களையே தாதியர்களாக ஆட்சேர்க்க முடியுமென தாதியர் யாப்பு விதியில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கலைப் பிரிவில் தகைமைகளைக் கொண்டோரை தாதியர் சேவைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையானது கண்டிக்கத் தக்கதென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கருத்துத் தெரிவித்தனர்.

மேற்படி கவன ஈர்ப்பு நடவடிக்கை குறித்து - ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரும், அரச தாதி உத்தியோகத்தர் சங்க உப தலைவரும், சங்கத்தின் கிழக்கு மாகாணத்துக்காக இணைப்பாளருமான பி.எம். நசிறுத்தீன் கருத்துத் தெரிவிக்கையில்ளூ

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் - கலைப்பிரிவிலிருந்து தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்கம் தற்போது நேர்முகப் பரீட்சைகளை நடத்தியுள்ளது. இது தாதிய யாப்பு விதிக்கு முரணானதொரு நடவடிக்கையாகும்.

1999 ஆம் ஆண்டிலிருந்து தாதிச் சேவைக்கு உயர்தர விஞ்ஞானப் பிரிவிலிருந்து மட்டுமே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

கலைப் பிரிவில் கற்றவர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு சில காலங்களுக்கு முன்னர் எடுத்த தீர்மானத்துக்கு அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தது. அதனால், அந் நடவடிக்கை பிற்போடப்பட்டது.

ஆயினும், தற்போது மீண்டும் கலைப் பிரிவிலிருந்து விண்ணதாரர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எமது எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்காகவே நாம் இந்த கவனஈர்ப்பு நடவடிக்கையினை மேற்கொள்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0

  • riyas Friday, 05 August 2011 03:01 PM

    arts students எப்படி science teacher ஆக முடியாதோ அவ்வாறுதான் இதுவும் .

    Reply : 0       0

    Muzarrath Thursday, 11 August 2011 03:29 PM

    நீங்கள் சயின்ஸ் படித்த காரணத்தால் நீங்கள் எல்லாம் விஞ்ஞானிகள் ஆகிவிட முடியாது. நர்சிங் என்பது ஒரு தொழில் மட்டுமே. அதற்கு முறைமையான பயிற்சியும் அர்ப்பணமும் மட்டுமே போதுமானது.

    Reply : 0       0

    pragash Wednesday, 10 August 2011 09:28 PM

    பார்க்கிற நேரம் எல்லாம் ஊர் வம்புதான். ஒழுங்கா உங்கட வேலைய பாருங்க.

    Reply : 0       0

    hrish Wednesday, 10 August 2011 05:13 AM

    சயின்ஸ் படிக்கும் பொழுது தாதியர் பயிற்சி தருகின்றார்களா? நீங்களும் ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாமல் சென்று பயிற்சி பெற்று வந்து வேலை செய்கின்றீர்கள். அப்படி செய்ய கலை வர்த்தகம் படித்தவர்களால் செய்ய முடியாதா?

    Reply : 0       0

    Hassan Monday, 08 August 2011 12:51 AM

    Riyas கொஞ்சம் நன்றாக யோசித்து இந்த பக்கத்தில் எழுதவும் , ஏன் Science பிரிவில் படிச்சவங்க வர்த்தகத்துறையில் ஈடுபடவில்லையா ?

    Reply : 0       0

    Hassan Monday, 08 August 2011 12:46 AM

    கலை , வர்த்தகப்பிரிவில் படித்தவர்கள் தாதி வேலைக்கு வந்தால் இவர்களுக்கு வேலைப்பளு கூடிவிடும் என்று பயமாக இருக்குது போலும் ! அங்கு நோயாளிகள் தாதியர்களின் சேவை இன்றி அவதியுறுகிறார்கள் அவர்களை கவனிப்பதை விட்டு விட்டு இங்கு வந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துகிறார்கள் , இவர்களுக்கு இவ்வாறான குறுகிய மனப்பான்மை இருக்கும்போது இவர்கள் எவ்வாறு நோயாளிகளை அன்பாக கவனிப்பார்கள்?

    Reply : 0       0

    Anver Saturday, 06 August 2011 05:10 AM

    இலங்கையில் உள்ள தாதி மார்களில் எத்தனை பேரு சயின்ஸ் படிச்சவங்க ?

    Reply : 0       0

    uvais.m.s Friday, 05 August 2011 11:43 PM

    உங்களை போன்று படித்துவிட்டு வேலைக்கு போக விரும்புபவர்களை ஏன் தடுக்கிறீர்க?ள் இதனால் உங்களுக்கு என்ன கெடுத?ல் நம்மை போன்று யாரும் வந்துவிட கூடாது என்பதில் ஏன் இந்த பொறாமை? அவர்கள் பணியில் சேர்ந்து கொண்டும் படிப்பை தொடரலாமே? மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் பொது உங்கள் சம்பளத்திலா அவர்ட்களுக்கு சம்பளம் கொடுக்க போகிறார்கள்? அரசாங்கம் தானே கொடுக்க போகிறது.

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 05 August 2011 08:54 PM

    றியாஸ் தம்பி, இங்கு ஆபரேஸன் செய்ய ஆள் எடுக்கவில்லை. அங்கு வரும் நோயாளர்களின் மேலதிக கவனிப்பான தாதியர் சேவைக்குதான் ஆளெடுப்பு. அதுக்கு கலைப்பிரிவும் வர்த்தகப்பிரிவும் விஞ்ஞானப்பிரிவும் எல்லாபிரிவும் எடுக்கலாம். ஏன் என்றால் அவர்களுக்குத்தான் வருடக்கணக்கில் பயிற்சி நடக்கிறது.

    Reply : 0       0

    Muhaj Thursday, 04 August 2011 02:22 AM

    I really wonder about this staff. Many science students don't go to this job. Thats why arrangement made for intake other stream students. But these staff is doing unwanted. staff suit & ready for these types of inhuman activities.

    Reply : 0       0

    Wishal Friday, 05 August 2011 01:48 PM

    இந்த photo வில் நிற்பவர்கள் science படித்தது உண்மைதான். ஆனால் உங்கள் result என்னவென்று உங்களுக்கே தெரியும். saline போடவும் injection போடவும் science தேவயில்லை. நல்ல பயிற்சியும் முக்கியமாக பண்பாடும் தேவை. patient உடன் அன்பாக நடக்க முயற்சிக்கவும்.

    Reply : 0       0

    riyas Friday, 05 August 2011 01:28 PM

    நோயாளியர்களை கவனிப்பதில் பாரிய பொறுப்பு தாதியர்களுக்கு உள்ளது. தாதியர்களின் கவனீனம் நோயாளர்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது . சிறந்த தாதியர்களை உருவாக்குவதன் மூலம்தான் சிறந்த தாதியர் சேவை வழங்க முடியும் . தாதியர் பாடம் முழுதாக விஞ்ஞானம் சார்ந்து இருப்பதால் அதற்கு அந்த பிரிவு மாணவர்களே பொருத்தமானவர்கள் .

    Reply : 1       1

    சிறாஜ் Friday, 05 August 2011 06:06 AM

    இதுக்கொரு நேரம் எடுத்து ஆர்ப்பாட்டம் பண்ணுறிங்களே உங்களுக்கு விட்டுக்கொடுத்து மற்றவனும் வேலை செய்யனும் என்ற எண்ணம் இல்லையா சுய நலமா? இது

    Reply : 0       0

    magim Friday, 05 August 2011 02:43 AM

    Most science student don't like this job. That s y arrangement made for take other stream students. So this an unwanted activities. Nurse job is an essential service in this country. Some of the Ashraf memorial staff used to play fool like this.

    Reply : 0       0

    Birdeye Friday, 05 August 2011 01:46 AM

    Science படிச்ச தாதிகள் மட்டும்தானா தாதி கடமையாற்ற முடியும் ? பயிற்சி காலத்தில ஒழுங்கா கவனம் செலுத்தினா போதும், யாரும் ஆற்ற முடியும். சும்மா தொழில் கிடைக்கிற பிள்ளைகளின்ர வயிற்றில மன்னபோடாம, கடமை நேரத்தையும் வீணாக்காம ஆக்கபுர்வமான செயல்களில ஈடுபடுங்க ......

    Reply : 0       0

    deen Mohamed Thursday, 04 August 2011 05:12 PM

    இவங்க என்ன சயின்ஸ் படிக்கும் போது மட்டும் என்ன தாதியாகாவா படிச்சாங்க? இல்லையே அப்ப ஏன் சவுண்ட் கொடுக்க்காங்க சும்மா இருக்காமே. வேலைய பார்ப்போமா.

    Reply : 0       0

    mohamed jaleel i Thursday, 04 August 2011 05:19 AM

    இதுல என்ன தப்பு? நமது நாட்டில் அப்படி ஒன்று நடந்தால் மக்களுக்கு நல்லம் தானே? இதைப் போய் வானம் இன்று சொல்றிங்க?

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 04 August 2011 03:37 AM

    உங்களை எல்லாம் தாதியப்பயிற்சிக்கு எடுத்த உடனே வேலைக்குத்தான் விட்டார்களா? உயர் தரம் கலைப்பிரிவு வர்த்தகப்பிரிவும் படித்தவர்களுக்கு ஏன் தாதியப்பயிற்சிக்கு போகமுடியாது? மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதால் உங்களுக்கு ஏதும் நஸ்டம் ஏற்பட்டு விடுமா?
    இன்று இலங்கையில் ஒவ்வொரு மூலையில் இருந்து வரும் முறைப்பாடு வைத்தியசாலையில் சரியான கவனிப்பு இல்லை என்று இது ஏன் என்று பார்த்தால் தாதியர் தட்டுப்பாடு எனவே தாராளமாக சேர்க்கலாம்!!!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7