2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சிறுவர் பூங்காவினை புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை பிரதேச சபை பிரிவுட்குட்பட்ட வளத்தாப்பிட்டி கிராமத்தில் மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் சிறுவர் பூங்காவினை புனரமைத்துத் தருமாறு இப்பிரதேச மக்களும், பொதுநல அமைப்புக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இச்சிறுவர் பூங்கா காலம் சென்ற மர்ஹூம் யூ.எல்.எம். முகைதீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டது.

தற்போது இச்சிறுவர் பூங்காவிலுள்ள பல இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும், ஏனைய பொருட்களும் பழுதடைந்து உடைந்துவிழும் நிலையில் காணப்படுகின்றன.

எனவே, இச்சிறுவர் பூங்காவை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7