Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மணல்சேனை கிராமத்தில் 25 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பங்களுக்கு நிரந்தர குடியிருப்புக்கான காணி வழங்குதல் தொடர்பான காணிக் கச்சேரி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில் 27 தமிழ் குடும்பங்களுக்கும் நிரந்தர காணி உரிமம் கிடைக்கும் வரையில் நீண்டகால குத்தகை அடிப்படையிலான பத்திரங்களை வழங்குவதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கல்முனை பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்ற இக்காணிக் கச்சேரியில் தலைமைக் காரியாலய காணி உத்தியோகத்தர் பீ.கோவிந்தசாமி, காணித் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago