Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் விசேட தேவையுடையவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு சமூக சேவை அமைச்சினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சமூக சேவை உத்தியோகத்தர் ஐ.பதுறுதீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், கணக்காளர் திருமதி.எம்.எம்.உசைனா, சமூக சேவை திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் ஏ.எம்.எம்.அஹ்சன், விடய முகாமைத்துவ உதவியாளர் எம்.எஸ்.சித்தி அஜ்மியா உட்பட கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இதுவரை தெரிவு செய்யப்பட்ட 26 குடும்பங்களுக்கு இவ்வாறு சமூக சேவை அமைச்சினால் உதவி தொகை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago