2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சம்மாந்துறையிலும் மர்ம மனிதனால் கலவரம்

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன் ,எம்.சி.அன்சார் , எஸ்ஆர்.அஹமட்)

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்பட்ட இருவரை சம்மாந்துறை பொலிஸார் காக்க முற்பட்டார்கள் என்பதால் சம்மாந்துறை பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கைலப்பு ஏற்பட்டுள்ளது. பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் மீது சம்மாந்துறை பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது...

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கோரக்கோயில் பிரதேசத்தில் பெண்ணொருவர் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார். இரவுவேளை என்பதால் அவ்விடத்திற்கு மர்மமான முறையில் வந்த இருவர் அப்பெண்மீது சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர். உடனே அப்பெண் கூச்சலிட்டு ஊரைக் கூட்டியதும் அவ்விருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடி ஒழிந்துள்ளனர். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சத்தமிட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தினை வளைத்து பொது மக்கள் சூழ்ந்து கொண்டதனால் நிலைமையை கட்டுப்படுத்த  விசேட  அதிரடிப்படையினர் மற்றும் அம்பாறை கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கபட்டனர் மக்களை கலைத்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டவேளையில் பொலிஸார் மீது  கல்லெறிகள்  விழுந்துள்ளன. அதையடுத்து பொலிஸார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலகத்தில் ஈடுபட்டவர்களை அடக்க முற்பட்டிருக்கிறார்கள்.

தற்சமயம் நிலைமை சுமூக நிலைக்குத் திரும்பியுள்ளது. விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சேத விபரம் பற்றி இதுவரை எதுவித தகவலும் வரவில்லை. இதுபற்றி பொலிஸாரும் எதுவித தகவலையும் சொல்ல மறுத்துவிட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • kuru Friday, 12 August 2011 06:15 AM

    வல்லவனுக்குபுல்லும்ஆயுதம்.ஊர்ஒன்றுபட்டால்.....

    Reply : 0       0

    நளீம் Friday, 12 August 2011 10:46 AM

    சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மிக்கவர்களே குற்றச் செயல்களுக்கு துனைநிற்கின்ற விடயமே மக்கள் இவ்வாறாக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த காரணமாகின்றது. பத்தோடு சேர்ந்து பதினொன்றாக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்லுகின்றதே தவிர ஆக்கபுர்வமான நடவடிக்கைள் இதுவரையில் மேற்கொள்ளப்படாமலிருப்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ் மனிதர்கள் எனப்படுவோர் யாரால் நியமனம் செய்யப்பட்வர்கள்? இவர்களது இலக்கு என்ன? வெளிச்சத்திற்கு வருமா உண்மைகள்...........?

    Reply : 0       0

    uvais.m.s Friday, 12 August 2011 02:50 PM

    மர்ம மனிதன் என்ற போர்வையில் பொதுமக்களை தூண்டி விடும் செயல்.

    Reply : 0       0

    ram Friday, 12 August 2011 02:57 PM

    எல்லா ஊர்களிலும் உள்ள போலிஸ் நிலையங்களிலும் குறிப்பாக இந்த நாசகார வேலையில் ஈடுபடுபவர்களை கையும் மெய்யுமாக பிடித்ததும் ஏன் காப்பாத்துகிwhர்கள். இதை செய்பவர்கள் எங்களுக்கு கிரீ]]; மனிதரோ கள்ளனோ என்பதோ அல்ல இவர்களை பிடித்ததும் ஏன் கப்ghw;Wகிறார்கள் என்பதுதான் எல்லா ஊர் மக்களின் பிரச்சினையும். இப்படியே இது தொடர்வது நல்லதற்கல்ல.

    Reply : 0       0

    RJ.Moorthy Friday, 12 August 2011 03:25 PM

    என்னதான் நடக்குது?

    Reply : 0       0

    Riyas Friday, 12 August 2011 08:03 PM

    நாட்டில் யுத்தம் இல்லை என்றதும் மீண்டும் யுத்தம் உருவாக்குகிறார்கள்.

    Reply : 0       0

    xlntgson Friday, 12 August 2011 09:09 PM

    இரவு நேர ரோந்துகள் அவசியம். அதை பொலிஸும் கிராம மக்களும் கூட்டாக செய்ய வேண்டும்.

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 12 August 2011 09:17 PM

    அப்படியானால் ரோந்துகள் என்னும் பெயரில் இன்னும் அனாச்சாரமா? முதல்ல மக்களின் பீதியைப்போக்க பொலிசார் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கனும்.

    Reply : 0       0

    safras Friday, 12 August 2011 11:59 PM

    ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து உங்களுடைய ஊரை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும்.

    Reply : 0       0

    Jaleel Saturday, 13 August 2011 12:27 AM

    ஏன் அரசியல்வாதிகள் இதுக்கு ஒத்துழைக்க மாட்டார்களா? அல்லது அவர்களும் மர்ம மனிதர்களுடனோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7